Author: Editor web3

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ–க்கள் தொடர்பான இறுதி வழிகாட்டு விதிமுறைகளை ஜனவரி 5 ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில், செப்டம்பர் 27 ம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி, த.வெ.க, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளும், மதுரையைச் சேர்ந்த திருக்குமரன், பிரகாஷ் உள்ளிட்ட தனிநபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று,…

Read More

ஷெரீஃப் உஸ்மான் ஹாடி உயிரிழப்பை தொடந்து வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் மீண்டும் வன்முறைச் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் டாக்காவில் உள்ள மசூதி ஒன்றிலிருந்து வெளியே வந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு ஹாடி இலக்காகியிருந்தார். இதில் படுகாயமடைந்த அவர், சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்தார். 2024 போராட்டத்திற்குப் பின்னர் பங்களாதேஷ் தேர்தலுக்கான திகதியை அறிவித்த மறுநாளே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் அத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மரணச் செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் டாக்காவில் திரண்டு போராட்டங்களை…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,  தமிழக அரசியல் குறித்து முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது பாஜக தேசிய தலைமை.  இந்த நேரத்தில், பாஜக – அதிமுக அடங்கிய எண்டிஏ கூட்டணியை வலுப்படுத்த இருகட்சிகளின் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.  என்டிஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி என்று அடுத்தடுத்த முகங்கள் கழன்று சென்ற நிலையில், தமிழக பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது என்று டெல்லி தலைமை கவனம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. இப்படியாக, தமிழகத்தில் எண்டிஏ கூட்டணியில் குழப்பங்கள் நடந்து வரும் நிலையில்தான்,  தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி விரைந்து சூழ்நிலைகளை தெரிவிப்பதாகவும் தெரிகிறது. அதிலும், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வரமாட்டோம் என்று கூறிவிட்டார் டிடிவி. அதோடு, கூட்டணியில் இருந்து வெளியேற, நயினாரின் மனநிலையும் செயல்பாடுமே காரணம் என்று கூறியிருந்தார். இருப்பினும்,  பாஜக தரப்பில் பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், பாமகவில்…

Read More

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி டிசம்பர் 19 இன்று நடைபெறுகிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரில் விளையாடி வருகின்றன. நான்காவது போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்தியா தற்போது தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது, எனவே அவர்கள் தொடரை வென்று சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க முயற்சிப்பார்கள். இந்த போட்டியை எப்போது, ​​எங்கு பார்க்கலாம், நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணியின் சாதனை என்ன, இரு அணிகளுக்கும் சாத்தியமான பிளேயிங் லெவன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்… ஐந்தாவது மற்றும் இறுதி டி20 சர்வதேச போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்குத் தொடங்கும், டாஸ் மாலை 6:30…

Read More

அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், தற்போது தென் மாவட்டங்களை குறிவைத்து மாநாடு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் நோக்கி தவெகவின் விஜய் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக ரோடு ஷோ, மாநாடு என பல பிரச்சாரங்களை ஈர்த்த விஜய்க்கு கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அடியை கொடுத்தது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். அதன் பிறகு மாநாடுகள் நடத்த சற்று இடைவெளி விட்டிருந்த விஜய், கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் மாநாட்டை நடத்தினார். இதனை தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் விஜய்க்கு ஆதரவுகள் கிடைத்தன. மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் தற்போது தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் களப் பணிகளில் தீவிரம்  காட்டி வரும் விஜய், இனிமேல் தென் மாவட்டங்களை குறிவைத்து மாநாடு நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வடக்கு டெல்டா, மேஎற்கு…

Read More

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அதிகரித்து வரும் பணவீக்க அச்சங்கள் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு போன்ற காரணிகள் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்ப கட்டாயப்படுத்துகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று மிகப்பெரிய குறைவை கண்டுள்ளது.  இன்று 22 கேரட் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,380க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் ரூ. 480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கணித்திருந்த நிலையில், இந்த திடீர் சரிவால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி விலை இன்று, கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.34,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.221-க்கும், ஒரு கிலோ ரூ.2,21,000-க்கும் விற்பனை ஆகிறது.

Read More

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வரும் ஜனவரி 6 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அறிவித்துள்ள நிலையில், வரும் டிச.22ம் தேதி அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர் சங்கங் களின் கூட்டமைப்பான, ‘ஜாக்டோ – ஜியோ’ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2003, ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உண்ணாவிரதம் பணியில் உள்ள ஆசிரி யர்களை, ‘டெட்’ தகுதி தேர்வு எனும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பது உள் ளிட்ட, 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, மாவட்ட நகரங்களில், ஜாக்டோ – ஜியோ கூட்ட மைப்பினர் கடந்த 14ம் தேதி உண்ணா விரத…

Read More

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் நடப்பதை தடுக்க தீவிர சோதனைகளை நடத்தவும், ஆய்வகப் பரிசோதனைகளை அமல்படுத்தவும், கடுமையான அபராதங்களை விதிக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் FSSAI உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI), கலப்படம் செய்யப்பட்ட பால், பனீர் மற்றும் கோயா ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பு அமலாக்க நடவடிக்கை (special enforcement drive) தொடங்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. செய்திகளின்படி, இந்த நடவடிக்கை சோப்பு/டிடர்ஜென்ட், யூரியா போன்ற தீங்கு விளைவிக்கும் கலப்புப் பொருட்கள் காரணமாக ஏற்படும் ஆரோக்கிய ஆபத்துகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இயக்கத்தின் கீழ், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை இடங்களில் தீவிர ஆய்வு, மாதிரி பரிசோதனை மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என FSSAI தெரிவித்துள்ளது. அதிகாரிகள், உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத அனைத்து உற்பத்தி நிலையங்களிலும் தீவிர…

Read More

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரின் நான்காவது போட்டி இன்று லக்னோவில் உள்ள எகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில், இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது, ஆனால் மூன்றாவது போட்டியில் இந்திய அணி மீண்டும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தநிலையில் இன்று 4வது டி20 போட்டி நடைபெறுகிறது. லக்னோவில் மூடுபனி காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. மாலை 6:30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த டாஸ் மூடுபனி காரணமாக தாமதமானது. நடுவர்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை மைதானத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தனர், ஆனால் நிலைமை மாறவில்லை. இந்தநிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டால், இந்திய அணிக்கு சாதமாக வாய்ப்பு அதிகமாக…

Read More

தூக்கம் என்பது நமது உடலுக்கு ஒரு அடிப்படைத் தேவை, ஆனால் அது பருவகாலங்களில் ஒரே மாதிரியாக இருக்காது. பருவங்கள் மாறும்போது, ​​நமது உடலின் வழக்கம், ஆற்றல் நிலைகள் மற்றும் தூக்க முறைகளும் மாறுகின்றன. குறிப்பாக குளிர்காலத்தில், மக்கள் பெரும்பாலும் அதிக தூக்கத்தை உணர்கிறார்கள். அவர்கள் காலையில் எழுந்திருக்க சிரமப்படுகிறார்கள், போர்வையை விட்டு வெளியேற விரும்புவதில்லை. பலர் இதை சோம்பேறித்தனமாக தவறாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில், இது உடலுக்குள் ஒரு இயற்கையான மற்றும் அறிவியல் செயல்முறையாகும். குளிர்காலத்தில் குறைவான சூரிய ஒளி, குறுகிய பகல்கள் மற்றும் நீண்ட இரவுகள் நமது உடலின் உயிரியல் கடிகாரத்தை மெதுவாக்குகின்றன, இதனால் தூக்கத்திற்கான நமது தேவை அதிகரிக்கிறது. உண்மையில், குளிர்காலத்தில், பகல்கள் குறைவாகவும், இரவுகள் நீண்டதாகவும் மாறும். சூரியன் தாமதமாக உதயமாகி அதிகாலையில் மறைவதால், உடலுக்கு வெளிச்சம் குறைவாகவே கிடைக்கும். ஒளியின் பற்றாக்குறை நம் உடலில் உற்பத்தியாகும் மெலடோனின் ஹார்மோனை நேரடியாக பாதிக்கிறது. மெலடோனின் என்பது உடலை…

Read More