Author: Editor web3
பல வருடங்களாக ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத்திய பின்னர், இப்போது மகாத்மா காந்தியை குறிவைத்து மத்திய அரசு செயல்படுவதாக ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு அறிமுகப்படுத்திய ” வளர்ந்த இந்தியா, ராம்ஜி மசோதா” தொடர்பாக காங்கிரஸ் மோடி அரசைத் தாக்கி வருகிறது . காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளன , இது மாநிலங்களின் உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தியின் மரியாதை தொடர்பான பிரச்சினை என்று கூறுகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் ( MNREGA ) பெயரை மாற்றுவது மகாத்மா காந்தி இரண்டாவது முறையாக படுகொலை செய்வதற்குச் சமம் என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப . சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மசோதா வெறும் பெயரை மாற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல் , திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பிலும் பெரிய மாற்றங்களைச் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன . இந்தநிலையில்,…
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்தார். கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது ‘GOAT இந்தியா டூர் 2025’ பயணத்தின் ஒரு பகுதியாக, ஜாம்நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் ‘வந்தாரா’ (Vantara) வனவிலங்கு மையத்திற்கு சென்றார். இந்த நிகழ்வில் பல ஆச்சர்யமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு USD 1.2 மில்லியன் (சுமார் ரூ.10.9 கோடி) மதிப்புள்ள மிக அரிய ரிச்சர்ட் மில்லே (Richard Mille) கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கிய தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. Richard Mille RM 003-V2 GMT Tourbillon ‘Asia Edition’ என்ற வாட்ச்சின் மதிப்பு சுமார் ரூ.10.91 கோடி என்று கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வகையை சேர்ந்த வாட்ச் உலகிலேயே 12 வாட்ச்சுகள் மட்டுமே உள்ளன. இதுமட்டுமல்லாமல், ஆனால் மெஸ்ஸியின் வந்தாரா பயணம், வெறும் ஆடம்பரத்துக்கான சந்திப்பாக மட்டுமல்ல. சனாதன தர்ம மரபுகளை பின்பற்றி, அவர்…
தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசியளவில் உற்று நோக்கும் தொகுதியாக கோவை இருக்கிறது. அந்தவகையில், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து போட்டிக்கு தயாராகி வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள கோவையில் வேட்பாளர்கள் தேர்வில் செந்தில் பாலாஜி களமிறங்குவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. தற்போதே அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டன. ஒருபுறம் கூட்டணி, மறுபுறம் களப் பணி என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த 2021 தேர்தலில் திமுகவிற்கு பெரிதும் பின்னடைவாக அமைந்தது கொங்கு மண்டலம். அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. இது திமுகவிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதேசமயம் அடுத்தடுத்த தேர்தல்களில் திமுக எழுச்சி கண்டது. இதில் செந்தில் பாலாஜியின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தற்போது கரூர் மாவட்டத்திற்கு பதிலாக கோவையில் போட்டியிட…
சில நேரங்களில் நீங்கள் சிறிய விஷயங்களுக்காக அழுவதையும், “நான் ஏன் இவ்வளவு பலவீனமாக உணர்கிறேன்?” என்று யோசிப்பதையும் காணலாம். ஆனால் உண்மை என்னவென்றால், மன வலிமை என்பது ஒரு உள்ளார்ந்த குணம் அல்ல; அதைக் கற்றுக்கொண்டு வளர்க்கலாம். மன வலிமையாக இருப்பது என்பது உணர்ச்சிகளை அடக்குவதைக் குறிக்காது, மாறாக அவற்றைப் புரிந்துகொள்வதும், ஒவ்வொரு கடினமான சூழ்நிலையையும் தைரியத்துடனும் புரிதலுடனும் எதிர்கொள்வதும் ஆகும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், ஒவ்வொரு சவாலுக்கும் உங்களைத் தயார்படுத்தவும் நீங்கள் பின்பற்றக்கூடிய சில உளவியல் தந்திரங்கள் உள்ளன. உங்களை மனதளவில் வலிமையாக்குவது எப்படி: 5 உளவியல் தந்திரங்கள்: முதலில், உங்கள் உணர்ச்சிகள் எப்போது, ஏன் கட்டுப்பாட்டை மீறுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அழுவது அல்லது உணர்ச்சிவசப்படுவது பரவாயில்லை, ஆனால் உங்கள் உணர்ச்சிகளை அடையாளம் காணக் கற்றுக்கொள்வது மன வலிமைக்கான முதல் படியாகும். எந்த சூழ்நிலைகள் உங்களை வருத்தப்படுத்துகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொண்டவுடன், அவற்றைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும். ஆழ்ந்த…
மருத்துவக் கல்லூரிகள் மருந்துச் சீட்டு நடைமுறைகளைக் கண்காணிக்கவும், தெளிவான கையெழுத்தை உறுதி செய்யவும் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம்(NMC) உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்களால் மருந்துச் சீட்டுகளைப் படிக்க முடியவில்லை என்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன. இதனால் மருந்தகத்தில் இருந்து பெறப்படும் மருந்து மருத்துவர் பரிந்துரைத்த மருந்துக்கு இணையானதா என்பதைக் கண்டறிவது கடினமாகிறது. சில நேரங்களில், மருந்தாளுநர்களால் கூட மருத்துவரின் கையெழுத்தைப் புரிந்துகொள்ள முடியாது. தவறான மருந்து வழங்கப்பட்டால், அது நோயாளியின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது, மருத்துவர்களின் மருந்துச் சீட்டுகள் தெளிவாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தேசிய மருத்துவ ஆணையம் (NMC), மருத்துவக் கல்லூரிகளை கண்காணிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்புக் குழு, மருந்துச்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் அண்மையில் 2ம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டபோது விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அப்டேட் இது. குறிப்பாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைனில் முறையிடலாம். எப்படி என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம். தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அண்மையில் 2ம் கட்டமாக விரிவாக்கம் செய்தது. 1.13 கோடி பேர் பயனாளிகளாக இருக்கும் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களில் இருந்து 17 லட்சம் பேரை அரசு தேர்வு செய்தது. இப்போது மொத்தம் 1,30,69,831 பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக அதிகரித்திருக்கின்றனர். மற்றவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து, இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டபோது, ரூ.1000 பெறாதவர்களின் விண்ணப்பங்கள்…
வெனிசுலா – அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் அறிவித்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கரீபியன் கடல் வழியாக லத்தின் மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி கடத்தப்பட்டு வரும் போதைப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவுக்குள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், வெனிசுலா நாட்டில் இருந்து போதைப் பொருள் அதிகம் கடத்தப்படுவதாகவும் இதற்கு பின்னணியில் சீனா இருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அதுமட்டுமின்றி, ஒருபக்கம் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சர்வதேச கடல் எல்லையில் நீர்முழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான், வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ”தென் அமெரிக்க…
கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்!. தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை!. உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோல்ட்ரிப் இருமல் மருந்தை விநியோகம் செய்ததாக, இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் சளி, இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கோல்ட்ஃரிப் இருமல் மருந்தை பரிந்துரை செய்தனர். அதன்படி ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுகுறித்து, அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள, ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கோல்ட்ரிப் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம், மே மாதம் நிறைவடைய உள்ளதால், இம்மாநிலங்களில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். இதனையொட்டி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்றரை மாதங்களே உள்ளதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இறங்கி உள்ளன. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனுக்கள் வாங்கும் பணியை துவக்கி உள்ளன. அடுத்த சில நாட்களில், கூட்டணி பேச்சை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஏற்கனவே தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நடைபயணத்தை துவக்கி உள்ளார். நாம் தமிழர்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெறும், இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பிரத்யேக பயிற்சிகள் அளித்து தயார் செய்து வருகிறார்கள். இதேபோல், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இப்போட்டிகளின்போது வாடிவாசல்களில் காளைகளை அவிழ்ப்பதையே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பெருமையாக கருதுகின்றனர். இந்தநிலையில், பொங்கல் மற்றும் தமிழா் திருவிழாவையொட்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறை செயலா் சுப்பையன் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது. விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக்…