Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
    தமிழ்நாடு

    பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025Updated:June 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tnea 2025 rank list tnea online org direct link check pdf counselling date tamil news 2025 06 27 11 42 38
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் கடலூர் மாணவி தரணி முதலிடம் பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த மைதிலி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பொதுப்பிரிவில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடமும், நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திகா இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன.

    சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

    தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 3,02,374 அதில் பதிவுக்கட்டணம் செலுத்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,50298. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 40,645 கூடுதலாகும். இந்த ஆண்டு தரவரிசை எண் வழங்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,41,641 இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 41.773 கூடுதலாகும்.

    இந்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 51,004 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் பள்ளிகல்வி துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 47,372 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 15,149 கூடுதலாகும்.

    இந்த ஆண்டு விளையாட்டு பிரிவின் கீழ் 5,885 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களின் விளையாட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 2,446 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர் பிரிவின் கீழ் 1,361 மாணாக்கர்களுக்கும். மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 473 மாணாக்கர்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கோவி செழியன், பொறியியல் தர வரிசைப் பட்டியலில் 145 பேர் 200க்கு 200 கட் ஆப் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுல்லைப் பெரியாற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்.. வெள்ளப்பெருக்கையொட்டி எச்சரிக்கை…
    Next Article ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்: ஒருங்கணைந்த மாவட்ட செயலாளர்கள் தைலாபுரம் தோட்டத்தில் சந்திப்பு
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.