Close Menu
    What's Hot

    “காவல்துறையினர் தாக்கியதாலேயே மரணம்!” 9 போலீசாரும் குற்றவாளிகள்!. சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு!.

    விக்கெட் மழை!. “ஐசிசி மகுடம் சூடிய அருந்ததி ரெட்டி!”. பிப். மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு!.

    “ஸ்டாலின் பயப்படுகிறார்”!. டெல்லி பயணம் குறித்து விமர்சித்தவர்களுக்கு இபிஎஸ் பதிலடி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»‘திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பலனடைந்துள்ளது’ – எலான் மஸ்க் பகிர்வு
    உலகம்

    ‘திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பலனடைந்துள்ளது’ – எலான் மஸ்க் பகிர்வு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    musk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்காவுக்கு வந்த திறமையான இந்தியர்களால் அமெரிக்க தேசம் பலனடைந்துள்ளது என உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கூறியுள்ளார். அவருடன் அண்மையில் செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் உரையாடி இருந்தார்.

    அது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், அதில் எலான் மஸ்க் பகிர்ந்து குறித்து விரிவாக பார்ப்போம். இதில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள், அமெரிக்க குடியேற்ற விதிகள் மற்றும் தனது குடும்பம் குறித்தும் மஸ்க் பேசியுள்ளார்.

    “அமெரிக்கர்களின் பணியை பிற நாட்டினர் பறிப்பதாக சொல்லும் கூற்றை பொறுத்த வரையில் அது எந்த அளவுக்கு உண்மை என எனக்கு தெரியவில்லை. நிச்சயம் திறன் கொண்ட பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது என்பதை எனது நேரடி அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும். அவர்களை கண்டறிவது பெரிய சவாலாக உள்ளது. சவாலான பணிகளை மேற்கொள்ள திறமைசாலிகள் வேண்டும். எனது நிறுவனம் அதில் கவனம் செலுத்துகிறது.

    எல்லை பகுதிகளில் சட்டவிரோத குடியேற்றத்தை நிச்சயம் தடுத்தாக வேண்டும். முந்தைய பைடன் தலைமையிலான ஆட்சியில் எல்லை பகுதிகளில் பலர் சட்டவிரோதமாக குடியேறினர். அதன் மூலம் ஆதாயம் அடைந்தனர். அதனால் சட்டவிரோத குடியேற்றம் கூடாது.

    அமெரிக்காவுக்கு வந்த திறமையான இந்தியர்களால் அமெரிக்க தேசம் பெரிதும் பலனடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு திறமைசாலிகளின் தேவை உள்ளது. எனது நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் திறன் கொண்ட நபர்களுக்கு சராசரிக்கும் கூடுதலான ஊதியத்தை வழங்குகிறது.

    அதே நேரத்தில் சில நிறுவனங்கள் எச்1-பி விசாவை தவறாக பயன்படுத்துகின்றன. அது மோசமான போக்கு. அதை நிச்சயம் தடுத்தாக வேண்டும். ஆனால், அதற்காக எச்1-பி விசா வழங்குவதையே நிறுத்த வேண்டும் என சொல்வதை ஏற்க முடியாது. ஏனெனில் இங்கு திறமைசாலிகளுக்கு தேவை உள்ளது.

    எனது மகன் பெயர் சேகர்: எனது இணையர் ஷிவோன் ஜிலிஸ் உடன் நான் பெற்ற மகன்களில் ஒருவருக்கு சேகர் என்ற இந்திய வம்சாவளியை சுட்டும் வகையிலான பெயரை சூட்டியுள்ளோம். சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை வைத்துள்ளோம். ஷிவோன் ஜிலிஸின் முன்னோர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அது எப்படி என்று எனக்கு தெரியாது. அதனால் இந்த பெயரை வைத்தோம்” என அவர் தெரிவித்தார்.

    1983-ல் நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர் சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை தனது மகனுக்கு மஸ்க் சூட்டியுள்ளதாக தகவல். ஷிவோன் ஜிலிஸ் – மஸ்க் இணையருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். 2021-ல் இரட்டை குழந்தைகள், 2024 மற்றும் 2025-ல் தலா ஒரு குழந்தையையும் அவர்கள் பெற்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு!.
    Next Article சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி
    Editor TN Talks

    Related Posts

    வங்கதேசத்தில் கோர விபத்து!. பேருந்து மீது ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு!

    March 23, 2026

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    March 22, 2026

    48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்!. பணிய மறுக்கும் ஈரான்!. உச்சகட்ட பதற்றம்!.

    March 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “காவல்துறையினர் தாக்கியதாலேயே மரணம்!” 9 போலீசாரும் குற்றவாளிகள்!. சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு!.

    விக்கெட் மழை!. “ஐசிசி மகுடம் சூடிய அருந்ததி ரெட்டி!”. பிப். மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு!.

    “ஸ்டாலின் பயப்படுகிறார்”!. டெல்லி பயணம் குறித்து விமர்சித்தவர்களுக்கு இபிஎஸ் பதிலடி!.

    ஜெ. மறைவுக்கு பிறகு முதல்முறை!. 9 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் TTV, நயினார்!

    உஷ்ஷ்ஷ்…!! திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆர்டர்..!!

    Trending Posts

    “காவல்துறையினர் தாக்கியதாலேயே மரணம்!” 9 போலீசாரும் குற்றவாளிகள்!. சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு!.

    March 23, 2026

    விக்கெட் மழை!. “ஐசிசி மகுடம் சூடிய அருந்ததி ரெட்டி!”. பிப். மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு!.

    March 23, 2026

    “ஸ்டாலின் பயப்படுகிறார்”!. டெல்லி பயணம் குறித்து விமர்சித்தவர்களுக்கு இபிஎஸ் பதிலடி!.

    March 23, 2026

    ஜெ. மறைவுக்கு பிறகு முதல்முறை!. 9 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் TTV, நயினார்!

    March 23, 2026

    உஷ்ஷ்ஷ்…!! திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆர்டர்..!!

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.