Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»டெல்லி மாசுபாடு!. ஏழைகள் மட்டுமல்ல, பணக்காரர்களும் அக்கறை கொள்ளவேண்டும்!. தலைமை நீதிபதி கவலை!
    இந்தியா

    டெல்லி மாசுபாடு!. ஏழைகள் மட்டுமல்ல, பணக்காரர்களும் அக்கறை கொள்ளவேண்டும்!. தலைமை நீதிபதி கவலை!

    Editor web3By Editor web3December 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    supreme court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடால் ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் கவலை தெரிவித்துள்ளார்.

    டெல்லி காற்று மாசுபாடு குறித்த வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜோய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் எம் பஞ்சௌலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, அமிகஸ் கியூரியான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங் ஆஜரானார். அப்போது வாதிட்ட அவர், மாசுபாடு காரணமாக நவம்பர்-டிசம்பர் மாதங்களில் திறந்தவெளி விளையாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக தெளிவான உத்தரவுகள் இருந்தபோதிலும், சில பள்ளிகள் இந்த நடவடிக்கைகளை தொடர வழிகளை கண்டறிந்துள்ளன என்று கூறினார். மேலும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் உள்ளன, ஆனால் அதிகாரிகள் அவற்றை மோசமாக செயல்படுத்துவதே பிரச்சினை என்று கூறினார்.

    மேலும், அபராஜிதா சிங் தெரிவித்ததாவது, நீதிமன்றம் நேரடியாக உத்தரவு வழங்கினால்தான் அதிகாரிகள் நடைமுறையில் உள்ள விதிகளை கடைப்பிடிக்கிறார்கள். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், “இந்த வழக்கு புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படும். மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும்; கட்டாயமாக நடைமுறைப்படுத்தக்கூடிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்” என்று கூறினார்.

    மேலும், “பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்கான தீர்வுகள் என்ன, என்னென்ன வழிமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையே நாங்கள் பார்க்க வேண்டும். அவற்றிற்கான உத்தரவுகளையே நாங்கள் வழங்குவோம். நாங்கள் உத்தரவு பிறப்பித்தால், அதை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர்கள் கூறக்கூடும் அல்லது நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடும். இந்த இரண்டு சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. சில உத்தரவுகள் கட்டாயமாக அமல்படுத்தப்படலாம். அத்தகைய சூழ்நிலைகளுக்கு மக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டி வரும். அவர்களின் வாழ்க்கை முறைகளிலும் மாற்றங்கள் தேவைப்படும். ஆனால் பெரிய நகரங்களில் மக்கள் ஏற்கனவே பின்பற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றுவது எளிதல்ல என்று தலைமை நீதிபதி கூறினார்.

    இந்த உத்தரவுகள் ஏழை மக்கள்மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தலைமை நீதிபதி கவலை தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட அமிக்கஸ் க்யூரியே, இத்தகைய நடவடிக்கைகளால் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான் என்று தெரிவித்தார். குறிப்பாக, GRAP-4 (Graded Response Action Plan) கட்டுப்பாடுகள் காரணமாக கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பதாகவும் அவர் கூறினார்.

    குழந்தைகளின் உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பான மனுவை மேற்கோள் காட்டி மற்றொரு வழக்கறிஞர் வாதிட்டதாவது, முன்பே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் இருந்தபோதிலும் பள்ளிகள் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகின்றன என்றார்.

    இதுகுறித்து அமிக்கஸ் க்யூரியேவும், “இந்த நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும், பள்ளிகள் இவ்விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான வழிகளை கண்டுபிடித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. CAQM (காற்றுத் தர மேலாண்மை ஆணையம்) மீண்டும் இந்த நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி வருகிறது” என்று தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா?. மேற்கத்திய நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி கேள்வி!.
    Next Article பிரதமர் மோடி சென்ற ஜோர்டானின் நாணயம் எவ்வளவு வலிமையானது?. இந்திய ரூபாயை விட மதிப்பு அதிகமாம்!
    Editor web3
    • Website

    Related Posts

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    August 9, 2026

    புதுச்சேரி காவல் துறைக்குச் சிறப்பு சேர்த்த குடியரசுத் தலைவர் வண்ணக் கொடி விருது!. மத்திய அமைச்சர் அமித்ஷா வழங்கினார்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.