ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கிய ‘Avatar: Fire and Ash’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், உலகளவில் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘அவதார் ஃபையர் அன்ட் ஆஷ்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவதார் சீரிஸின் 3-வது பாகமாக இந்தப் படம் உருவானது. ஆனால், ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களையே இந்தப் படம் பெற்று வருகிறது.
ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் சாம் வொர்திங்டன், ஜோய் சால்டனா, ஸ்டீஃபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அவதார்’. இந்தப் படம் கடந்த 2009-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலைஈட்டியது.
இதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘Avatar: The Way of Water’ என்ற பெயரில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘அவதார்’ சீரிஸின் 3-வது பாகம், ‘Avatar: Fire and Ash’ என்ற பெயரில் வரும் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறது. மேலும் 2 பாகங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அளித்த பேட்டியில் ‘அவதார் 4’ படத்தை இயக்கும் எண்ணமில்லை என்றும் கூறியிருந்தார். ‘அவதார் 3’ வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதன் திரையனுபவம் சிலாகிக்கப்படுகிறது. அட்டகாசமான கிராஃபிக்ஸ் பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. இதனால் படத்தின் வசூல் என்பது குறையவில்லை.
இதனால் இந்தப் படம் முதல் நாள் உலக அளவில் ரூ.500 கோடிக்கும் மேலாகவும், இந்தியாவில் மட்டும் ரூ.20 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெரும் குறையாக அதன் நீளம் கருதப்படுகிறது. ‘அவதார் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வசூலித்து சாதனை படைத்தது. அந்த சாதனையை ‘அவதார் 3’ முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் ‘அவதார் 3’ திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் டிஸ்னி சேவைகளை வழங்கும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்தப் படம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.