வேளாங்கண்ணியில் நிதியமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது;-
2021-இல் ஆட்சி முடியும் காலகட்டத்தில் அதிமுக, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அதன் பின்னர் வந்த திமுக, அந்த விவசாயக் கடன் தள்ளுபடியை ஸ்டேஜ் பை ஸ்டேஜா தவணை முறையில செஞ்சிருக்காங்க.
2024-ல ஆர்பிஐ ஒரு ரூல் சொல்லிருக்கறாங்க. அந்த அடிப்படையில்தான் இப்போது தவெக ஆட்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிபடி உதவித் தொகையை பெண்கள் எதிர்பார்ப்பதாக செய்தியாளர்களின் கேள்விக்கு, ரிவைஸ்ட் பட்ஜெட்டில் எல்லாம் தெரியவரும் எனக் கூறிய அமைச்சர் மரிய வில்சன், விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
