Close Menu
    What's Hot

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ஆன்மீகம்»திருப்பதி : ஒரே நாளில் 4.15லட்சம் லட்டுகள் விற்பனை..! ஏழுமலையானை தரிசனம் செய்ய குவியும் பக்தர்கள்..!
    ஆன்மீகம்

    திருப்பதி : ஒரே நாளில் 4.15லட்சம் லட்டுகள் விற்பனை..! ஏழுமலையானை தரிசனம் செய்ய குவியும் பக்தர்கள்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தருவர்.

    கோடை விடுமுறையை ஒட்டி பக்தர்கள் லட்சக்கணக்கில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். பெருமளவில் பக்தர்கள் தங்களது வாகனங்களில் தரிசனத்திற்கு வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கின்றன.

    நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் உணவு, குடிநீர், பால், டி, காபி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அவசர உதவிக்காக நடமாடும் மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் சுமார் 34,569பேர் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அதேப் போல 46,292 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இவர்கள் மூலம் சுமார் ரூ.3.80கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

    இது ஒருபுறம் இருக்க, ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அத்தோடு மேற்கொண்டு பணம் செலுத்தி பக்தர்கள் தங்களுக்கு தேவையான லட்டுகளை பெற்று செல்லலாம். அப்படி நேற்று ஒரே நாளில் சுமார் 4.15லட்சம் லட்டுக்கள் விற்பயனையாகி இருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தலில் திமுக தோல்விக்கான காரணம் என்ன..?? கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!
    Next Article மகளிர் பாதுகாப்பு ‘சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் நிறுத்திவைப்பு ஏன்? கனிமொழி எம்.பி கேள்வி..!!
    Editor TN Talks

    Related Posts

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    July 19, 2026

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.