Close Menu
    What's Hot

    ரூ. 361.69 கோடிப்பே…. 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு!

    கார்கேவின் கருத்துக்கு ரிஜிஜு காட்டமான பதில்..!! ராஜ்யசபாவில் வெடித்த அரசியல் வார்த்தைப் போர்!!

    பராமரிப்பு பணி எதிரொலி: மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமோனியா கசிவால் உயிரிழப்பு… ஆலை உரிமையாளர் உள்பட மூவருக்கு நிபந்தனை ஜாமீன்!
    Featured

    அமோனியா கசிவால் உயிரிழப்பு… ஆலை உரிமையாளர் உள்பட மூவருக்கு நிபந்தனை ஜாமீன்!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 ammonia
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமோனியா வாயு கசிவு வழக்கில் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் என்னும் இடத்தில் செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், ஜூன் 21 ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, இதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர் ஜோசப் ஜெகன், தண்டையார்பட்டியைச் சேர்ந்த  மோகன், தொழிற்சாலை மேலாளர் டேனியல் மற்றும் தொழிலாளர் முகவர் சுரேஷ் ஆகியோரை திருவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன் மற்றும் மோகன், மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங்  ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

    மனுதரார் தரப்பில் வழக்கறிஞர், கடந்த 50 நாட்களுக்கு மேல் சிறையில்  உள்ளதாகவும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனை ஏற்பதாக தெரிவித்தார்.

    இதனை அடுத்து உத்தரவிட்ட நீதிபதி குமரப்பன், உயிரிழந்தவர்கள் ஒவ்வொரு நபர்களுக்கும் பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். காயமடைந்த நபர்களுக்கு இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்து பின்னர் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகவும்,

    இப்போது அளிக்கின்ற இழப்பீட்டுத் தொகை எதிர்காலத்தில் வேறு ஏதேனும் இழப்பீடுகள் அரசு அல்லது விசாரணை ஆணையம் நிர்ணயித்தால் அதற்கு தற்போது வழங்கும் இழப்பீடு தொகையை  கட்டுப்படுத்தாது வேறு இழப்பீடுகளை பெற உயிரிழந்தவர்கள் குடும்பங்கள் பெறுவதற்கு தகுதி உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    மேலும் மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    ammonia gas leak Conditional Bail Court News Factory Accident Tamil Nadu News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணமா..?? ஆளுநரின் முக்கிய விளக்கம்..!!
    Next Article ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’
    Editor TN Talks

    Related Posts

    ரூ. 361.69 கோடிப்பே…. 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு!

    August 6, 2026

    கார்கேவின் கருத்துக்கு ரிஜிஜு காட்டமான பதில்..!! ராஜ்யசபாவில் வெடித்த அரசியல் வார்த்தைப் போர்!!

    August 6, 2026

    பராமரிப்பு பணி எதிரொலி: மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ. 361.69 கோடிப்பே…. 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு!

    கார்கேவின் கருத்துக்கு ரிஜிஜு காட்டமான பதில்..!! ராஜ்யசபாவில் வெடித்த அரசியல் வார்த்தைப் போர்!!

    பராமரிப்பு பணி எதிரொலி: மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

    மக்கள் என்ன சொல்கிறார்கள்? – நாடு தழுவிய பிரசார இயக்கத்தை தொடங்கியது சிஜேபி!

    அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு.. பரவும் கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் பதில்!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.