Close Menu
    What's Hot

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!. பட்டாசு சதிக்கு மைதானத்தில் பதிலடி!

    லோக் ஆயுக்தா சட்டம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கு..! நாளை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்..!
    Featured

    கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கு..! நாளை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்..!

    Editor web4By Editor web4July 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 41 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.

    41 பேர் உயிரிழந்ததற்கு விஜய்யின் தாமதம் தான் காரணம், அப்போதைய திமுக அரசின் சூழ்ச்சி தான் காரணம் என பல காரணங்கள் ஒவ்வொருவராலும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது.

    இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், விசாரணையை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது.

    இதற்கிடையே கடந்த 2-ந்தேதி நடைபெற்ற தவெக இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, காவல்துறையை வைத்துக்கொண்டு கரூர் மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார். கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு உள்ளது. அதை முடிக்காமல் விட மாட்டோம் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

    இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும். அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, புஸ்சி ஆனந்த், சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த இடையீட்டு மனுவில் கோரப்பட்டது.

    இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது. ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇப்பவும் நம்பர் 1..!! ஏற்றுமதியில் புதிய உச்சம்.. இந்தியாவின் தொழில் நகரமாக திகழும் தமிழ்நாடு..!!
    Next Article மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற ஐடி தம்பதி!. கோவையில் நெகிழ்ச்சி!
    Editor web4

    Related Posts

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    July 6, 2026

    மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!. பட்டாசு சதிக்கு மைதானத்தில் பதிலடி!

    July 6, 2026

    லோக் ஆயுக்தா சட்டம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!. பட்டாசு சதிக்கு மைதானத்தில் பதிலடி!

    லோக் ஆயுக்தா சட்டம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    பல.. பல.. பிளான்..!! பக்கா ஸ்கெட்ச் உடன் 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல் காந்தி..!!

    அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவலா..?? முன்னாள் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த இபிஎஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.