Close Menu
    What's Hot

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி  டூ திருச்செந்தூர்… ஐந்தாண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட இளைஞர்!
    Featured

    டெல்லி  டூ திருச்செந்தூர்… ஐந்தாண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட இளைஞர்!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 TUT B
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொரோனாவின் போது மனநலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் இருந்து தவறி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு வந்து சுற்றித்திரிந்த டெல்லியை சேர்ந்த முகமது ஆரிப் என்ற இளைஞரை ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்திருக்கிறது  டேனியல் நல்ல சமாரியன் மனநல காப்பகம் என்னும் தொண்டு நிறுவனம்.

    புது டெல்லி ஆர்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கார் டிரைவர் மற்றும் மெக்கானிக்கான இவர் கொரோனா காலத்தின்போது மனநலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் இருந்து ரயில் மூலம் வழிதவறி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதிக்கு வந்து அங்கே சுற்றி திரிந்துள்ளார்.

    004 TUT B 1

    இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் முகாம் மூலம் மீட்கப்பட்ட முகமது ஆரிப் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் அமைந்துள்ள நல்ல சமாரியன் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கு அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக சிகிச்சைக்கு பின் தற்போது நல்ல நிலையில் உள்ள முகமது ஆரிப் தனது முகவரி மற்றும் தாய் தந்தை பெயரை கூறியுள்ளார்.

    இதை அடுத்து தொண்டு நிறுவன ஊழியர்கள் டெல்லியில் உள்ள முகமது ஆரிப்பின் தாய் மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு, தங்களது மனநல காப்பகத்திற்கு வரவழைத்து முகமது ஆரிப்பை சேர்த்து வைத்தனர்.

    ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு தனது குடும்பத்தை சந்தித்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக முகமது ஆரிப் தெரிவித்தார்.

    004 TUT A

    இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முகமது ஆரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் தொண்டு நிறுவன ஊழியர்களுடன்  மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பின்னர் சொந்த ஊர் திரும்பினர்.

    மனநலம் பாதிக்கப்பட்டு மனநிலை சிகிச்சைக்குப் பின் டெல்லியைச் சேர்ந்த கார் டிரைவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    delhi Missing Person Tamil Nadu News tiruchendur Youth Rescued
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்!. திமுக புறக்கணிக்க முடிவு?
    Next Article இனிப்புக்கு கசப்பான செய்தி.. சர்க்கரை விலை குறைய இன்னும் 3 மாதங்கள் ஆகுமா?
    Editor TN Talks

    Related Posts

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    August 7, 2026

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    August 7, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    சமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!

    திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.