Close Menu
    What's Hot

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»“12 நாளில் இப்படியா..?” – ஆளும் தவெக அரசு மீது பாய்ந்த உதயநிதி
    Featured

    “12 நாளில் இப்படியா..?” – ஆளும் தவெக அரசு மீது பாய்ந்த உதயநிதி

    Editor web1By Editor web1May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhayanidhi vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.சிறுமியின் உடல் மீட்கப்பட்டதிலிருந்து கோவை மக்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அழுதுகொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், திமுக இளைஞர் அணி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார்.

    “கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிருகத்தனமான செயலைச் செய்த குற்றவாளிகளுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார். மேலும், “இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து கோவை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, திமுக அவர்களுக்கு துணையாக நிற்கும்” என்றும் உதயநிதி தெரிவித்தார்.

    புதிய அரசு பொறுப்பேற்று வெறும் 12 நாட்களுக்குள் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். “இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை மிகவும் கேள்விக்குறியாக்கியுள்ளது” என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். “இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்டம் ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என முதல்வர் விஜய்யை அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?. சீமான் ஆவேசம்!
    Next Article “பாஜகவின் பேராசை அடங்கவில்லை”!. பெட்ரோல் விலையால் கொதித்தெழுந்த கார்கே!
    Editor web1
    • Website

    Related Posts

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    May 31, 2026

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    Trending Posts

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    May 31, 2026

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    May 31, 2026

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    May 31, 2026

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.