எந்தவொரு பெண்ணுக்கும் பாலியல் வன்கொடுமை நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதிசெய்யவேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி தொகுதி எம்.பி.யும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி விடுத்துள்ள எக்ஸ்தளப் பதிவில்,
விளாத்திகுளம் வேடநத்தம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி,
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் துணை நின்று, குற்றம் நடந்த 76 நாட்களில் இவ்வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்றுதந்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குற்றவாளிக்கான தண்டனையை சட்டம் உறுதிசெய்துவிட்டது. இனி இதுபோல எந்தவொரு பெண்ணுக்கும் நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள கனிமொழி, அதற்கான வழிகளை அரசு தான் ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
