Close Menu
    What's Hot

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»நள்ளிரவில் பயங்கரம்!. முதிய தம்பதியை மிரட்டி 60 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை!. மர்ம நபர்களுக்கு வலை!
    Featured

    நள்ளிரவில் பயங்கரம்!. முதிய தம்பதியை மிரட்டி 60 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை!. மர்ம நபர்களுக்கு வலை!

    Editor web3By Editor web3June 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thiruvallur theft
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த அத்தங்கிகாவனூர் கிராமத்தில், வயதான தம்பதியினரைக் குறிவைத்து நள்ளிரவில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அத்தங்கிகாவனூர் பகுதியைச் சேர்ந்தவர் 76 வயதான விவசாயி கோபால் நாயுடு. இவருடைய மனைவி கௌசல்யம்மாள் (68). இவர்களது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுக்குத் திருமணமாகி, வெவ்வேறு ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால், இந்த முதிய தம்பதியினர் மட்டும் கிராமத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். 

    வழக்கம்போல நேற்று இரவும் கோபால் நாயுடுவும், அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மக் கும்பல், பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும், பூஜை அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகளையும் திருடியுள்ளனர்.

    பீரோ மற்றும் பூஜை அறையைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், தூங்கிக் கொண்டிருந்த கௌசல்யம்மாளின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியையும் அந்த கும்பல் பறிக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து விழித்துக்கொண்ட முதிய தம்பதி, பயத்தில் சத்தம்போட்டுக் கூச்சலிட்டுள்ளனர். இவர்களின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், கொள்ளையர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். மொத்தமாக 60 சவரன் நகையும், 5 லட்ச ரூபாய் பணமும் கொள்ளை போயுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வெங்கல் காவல் நிலையப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து வெங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முதியவர்களை அச்சுறுத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    Gold theft Thiruvallur Vengal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா: இடைத்தேர்தலுக்கு தடை கோரி  அதிமுக வழக்கு
    Next Article ச.ஜோசப் விஜய் முதலமைச்சராகி 35 நாட்கள்- தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; அலறும் பெண்கள்  
    Editor web3
    • Website

    Related Posts

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    June 15, 2026

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    June 15, 2026

    பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!

    10 ரூபாயா, வேலையா…  எது முக்கியம்? – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

    இன்ஸ்டா நட்பால் சிக்கலில் மாணவி..!! ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.