Close Menu
    What's Hot

    சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!

    நேட்டோ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு ரிவால்வர்;  துருக்கி அதிபர் எர்டோகன் பரிசால்  சர்ச்சை

    ரூ.100 கோடிப்பே..!! பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் சரியும் நிலத்தடி நீர்மட்டம்: எந்த மாவட்டத்தில் அதிகபட்ச வீழ்ச்சி?
    Featured

    தமிழகத்தில் சரியும் நிலத்தடி நீர்மட்டம்: எந்த மாவட்டத்தில் அதிகபட்ச வீழ்ச்சி?

    Editor web2By Editor web2July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Ground water
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக சரிந்துள்ளது.

    தமிழகத்தின் 38 மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கிட்டு மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வள தரவு மையம் வெளியிடும் ஜூன் மாத அறிக்கையில், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருப்பது தெரியவந்துள்ளது.

    அதன்படி, அரியலூரில் சராசரியாக 28.74 மீட்டர் ஆழத்தில் நிலத்தடி நீர் உள்ளது. அதைத் தொடர்ந்து கோவை (20.89 மீ.), கடலூர் (19.03 மீ.), நாமக்கல் (17.39 மீ.), புதுக்கோட்டை (16.60 மீ.), ஈரோடு (15.52 மீ.), கரூர் (13.52 மீ.), தஞ்சாவூர் (12.61 மீ.), திண்டுக்கல் (12.13 மீ.) ஆகிய மாவட்டங்களில் நீர்மட்டம் பதிவாகியுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 6.77 மீட்டர், தர்மபுரியில் 5.55 மீட்டர், கரூரில் 5.42 மீட்டர், நாமக்கல்லில் 5.26 மீட்டர், கோவையில் 4.81 மீட்டர், ஈரோட்டில் 4.24 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் சரிந்துள்ளது.

    விவசாயத்திற்காக தமிழ்நாட்டில் சுமார் 21 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன. மழைநீர் நிலத்திற்குள் ஊறும் வேகத்தைவிட பல மடங்கு அதிகமாக நீர் உறிஞ்சப்படுவதும், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதும் நிலத்தடி நீர்மட்டம் சரிவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

    நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு மேற்கொள்ளும் நீர்மேலாண்மை திட்டங்களுடன், பொதுமக்களும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நீர்வள நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பால் பரபரப்பு!
    Next Article மாநிலப் பொறுப்பு கேட்ட சி.வி.சண்முகம்.. முடிவு எடுக்க தயங்கும் தவெக தலைமை! நடக்கப்போவது என்ன..??
    Editor web2
    • Website

    Related Posts

    சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!

    July 11, 2026

    நேட்டோ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு ரிவால்வர்;  துருக்கி அதிபர் எர்டோகன் பரிசால்  சர்ச்சை

    July 11, 2026

    ரூ.100 கோடிப்பே..!! பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு..!!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!

    நேட்டோ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு ரிவால்வர்;  துருக்கி அதிபர் எர்டோகன் பரிசால்  சர்ச்சை

    ரூ.100 கோடிப்பே..!! பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு..!!

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்: இயக்குநர் சேரன் போட்டி!

    கட்டுமானப் பொருட்கள் விலை தாறுமாறு உயர்வு..!! எம்.சாண்ட் ஏற்றுமதிக்கு தமிழக அரசு வைத்த செக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.