Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சிங்கப்பெண் தொடக்க விழா திடீர் ரத்து..!
    Featured

    சிங்கப்பெண் தொடக்க விழா திடீர் ரத்து..!

    Editor web1By Editor web1May 29, 2026Updated:May 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 05 28 at 8.28.50 AM 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்குமான மிக முக்கியமான முன்னெடுப்பாக, முதலமைச்சர் விஜய், ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப்படையை இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது.

    பெண்கள் அச்சமின்றி நடமாடவும், கல்வி பயிலவும், பணிபுரியவும் வழிவகுக்கும் வகையில், குற்றங்கள் நடக்கும் வரை காத்திருக்காமல், அவை நடப்பதற்கு முன்பே தடுக்கும் வகையில் இந்தப் படை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அதிரடிப்படை நேரடியாக முதலமைச்சரின் கண்காணிப்பிலேயே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐடி பூங்காக்களில் இந்த அதிரடிப்படை 24/7 தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும். இப்படையின் சிறப்பு ஐஜியாக (Special IG) மூத்த ஐபிஎஸ் அதிகாரி பவானீஸ்வரி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக, ஒரு காவல் கண்காணிப்பாளர் (SP), இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSP), நான்கு ஆய்வாளர்கள் என 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

    இப்படையினர் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள், உடலிலேயே பொருத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் பிரத்யேகமான ரோந்து வாகனங்களுடன் களமிறங்கியுள்ளனர். அவசர உதவி எண் 100-க்கு வரும் புகார்கள் உடனடியாக இந்த அதிரடிப்படைக்கு மாற்றப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக விரைவாக பாதுகாப்பு மற்றும் உதவி கிடைப்பது உறுதி செய்யப்படும். மற்ற காவலர்களிடம் இருந்து தனித்து அடையாளம் காணும் வகையில், இந்த அதிரடிப்படைக்கு எனப் பிரத்யேக சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த அதிரடிப்படை காவல்துறை மட்டுமல்லாது, சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் (NGOs) இணைந்து செயல்பட உள்ளது. இது பெண்கள் தொடர்பான சிக்கல்களுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விழா ஒத்திவைக்கப்பட்டது.

    நிர்வாகக் காரணங்களால் இரண்டாவது முறையாக இந்த விழா ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழாவுக்கான தேதி மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article8 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்
    Next Article ஐபிஎல் 2026: இறுதிப்போட்டியில் நுழையப்போவது யார்? குஜராத் – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!
    Editor web1
    • Website

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.