தனிப்பெரும் கட்சியாக மக்களால் தவெக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அதுதான் அரசியலமைப்பு சட்டம் காட்டுகிற வழிகாட்டுதல். அவர் உரிமை கோரிய நிலையில் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் மேலும் இங்கே குழப்பம் ஏற்படுவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதல்ல.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் யார் யார் என்னும் பட்டியலை ஆளுநர் கோரமுடியாது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது என்பது பாஜக திரைமறைவில் தலையீடு செய்து குழப்பத்தை உருவாக்குகிறது என்னும் ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
எங்களைப் பொறுத்தவரை மக்கள் அளித்த தீர்ப்பின்படி விஜய் ஆட்சி அமைப்பதுதான் சரி. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்கமாட்டோம்.
பாரதிய ஜனதா கட்சி தொடக்கத்தில் இருந்தே தவெகவை கையாள்கிறது என நம்புகிறேன். இப்போதும் பாஜக அவரைக் கையாளத் துடிக்கிறது. கட்டுக்குள் வைக்க நெருக்கடி கொடுக்கிறது.
இந்த நிலையில் கான்கிரஸோடும், இடதுசாரிகளோடும் இணைந்து ஆட்சி அமைக்க விரும்புகிறோம் என்பதை நாங்கள் கன்ஸிடர் செய்கிறோம். இதில் உள்ள நல்லது கெட்டது, எதிர்கால அரசியல் போக்குகளை பரிசீலிப்போம் எனக் கூறியுள்ளோம்.
இத்குறித்த முடிவை முன்கூட்டியே அறிவிக்க முடியாது. மேலும் இடது சாரிகளுடன் பயணிப்பதால் அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டை அறிந்து முடிவு எடுப்போம்.
பாரதிய ஜனதா தவெகவை கையாளும் சந்தேகம் இன்றும் உள்ளது. அதன் அடிப்படையில்தான் முடிவெடுப்பேன்.
விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுத்துவிட்டு எடுப்பது என்பது தன்னுடைய கைப்பாவையாக விஜய்யை வைக்க மத்திய அரசு முயற்சிக்கிறத என்பதே பொருள். இதற்கு ஏற்ப ஆளுநரும் செயல்படுகிறார்.விஜய்யை உடனடியாக பதவியேற்கச் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டு அரசியலில் மேலும் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் என்பதுதான் பொருள்.
