இமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோ இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து குப்வி நகர் நோக்கி ராஜ்கார் வழியாக நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்து சிர்மோர் மாவட்டம், ஹரிபுர்தார் கிராமத்திற்கு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ, 2 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50000 நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதேபோல், மாநில அமைச்சரும் சுக்விந்தர் சிங் சுகுவும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version