நாடாளுமன்றத்தை கூர்ந்து கவனித்து வருவதாக கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களை உறுப்பினராக உள்ள நடிகர் கமல்ஹாசன், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். கூட்டத்தை முடித்து விட்டு சென்று திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“வெளியில் இருந்து கூர்மையாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த இடத்தை உள்ளே இருந்து பார்க்கிறேன். அதில் உள்ள கடமை புரிகிறது. பெருமை புரிகிறது. ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது. என்னுடைய முனைப்பு முதலில் நாடு, தமிழ்நாடு. இதுவே நாடாளுமன்றத்தில் எனது போக்கஸ். இதற்காகத்தான் போய் இருக்கிறேன்.

இது முக்கியமான பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். சரிவர என் கடமையை செய்வேன் என நினைக்கிறேன். ஆணவக் கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது. நம்முடைய சமுதாய அமைப்பு அப்படி. அதை மாற்ற வேண்டும். கட்சிகள் வரும் போகும் நாடு நடந்தே இருக்கும்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version