Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தவெகவுக்கு சிக்கல் – சிபிஐ விசாரணை கேட்ட மனு தள்ளுபடி
    அரசியல்

    தவெகவுக்கு சிக்கல் – சிபிஐ விசாரணை கேட்ட மனு தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksOctober 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251003 WA0025
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், ஒருநபர் விசாரணை ஆணையத்துக்கு தடை வேண்டும் என தவெக தாக்கல் செய்த மனுக்களை உயர்நீீதிமன்ற மதுரை கிளாஇ தள்ளுபடி செய்துள்ளது.

    கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் நடத்திய தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவத்தில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டும் எழுந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,ல் கரூர் மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் சம்பவத்துக்கு திட்டமிட்ட சதியே காரணம் என தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் திமுக அரசுக்கும், தவெக கட்சிக்கும் கருத்து மோதல்கள் வலுத்து வருகின்றன. கரூர் சம்பவம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இதேநேரம், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. கரூரில் நடந்தது தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரித்து வரும் சூழலில் விசாரணையை எதிர்த்தும், வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

    இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஒருவர் தவறு செய்தார் என்பதால் ஒட்டு மொத்த ஆணையத்தையும் குறை சொல்ல முடியாது. இதனால் அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதேபோல், ”கரூர் விவகாரத்தில் நடந்தது மிகப்பெரிய துயர சம்பவம். உங்களுடைய அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்தி கொள்ளாதீர்கள்” என்று கூறிவிட்டு கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    CBI High Court Karur Madurai court TVK tvk vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபரபரப்பான சூழலில் கூடுகிறது சட்டப்பேரவை – காவல் ஆணையர் அருண் முக்கிய அறிவுரை
    Next Article பாஜக கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? – மு.க.ஸ்டாலின் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.