Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பரபரப்பான சூழலில் கூடுகிறது சட்டப்பேரவை – காவல் ஆணையர் அருண் முக்கிய அறிவுரை
    தமிழ்நாடு

    பரபரப்பான சூழலில் கூடுகிறது சட்டப்பேரவை – காவல் ஆணையர் அருண் முக்கிய அறிவுரை

    Editor TN TalksBy Editor TN TalksOctober 3, 2025Updated:October 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Police Commissioner Arun
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் சட்டப்பேரவை கூடுதலை முன்னிட்டு சென்னை காவல்துறையினருக்கு காவல் ஆணையர் அருண் பல்வேறு முக்கிய அறிவுரைகளை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.

    ஆறு மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பட்ஜெட் கூட்டத்தினருக்கு பிறகு, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்திருந்தார்.

    அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலைகள் தற்போது நிலவி வருகின்றன. முக்கியமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் விபச்சாரக் கூட்டத்தின் போது 41 பேர் நெரிசலில் உயிரிழந்த விவகாரமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி சட்ட பேரவை கூடுகிற காரணத்தினால் சென்னை காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் வழக்கு விசாரணை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளை சென்னை காவல்துறை ஆணையர் அருண் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.

    அதில், “காவல் ஆய்வாளர் அனுமதி இன்றி காவல் நிலையத்தில் சந்தேக நபர்களை அடைத்து வைக்கக் கூடாது, விசாரணை கைதிகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், விசாரணையின் போது துன்புறுத்தல் கூடாது மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விரைந்து நீதிமன்ற காவலில் அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

    தவிர, விசாரணையின் போது மது போதையிலும், காயத்திலும் இருக்கும் கைது செய்யப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பின்னே விசாரிக்கப்பட வேண்டும் எனவும், கடுமையான குற்றங்களில் இரவு நேரங்களில் கைது செய்யப்பட்டவர்கள் கவனமாக கண்காணித்து விசாரிக்கப்பட வேண்டும், வழக்கு பதிவு செய்யப்படாமல் கைதி அறையில் எந்த நபரையும் வைத்திருக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் நோய் வாய்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

    மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    அதில், “தலைமைச் செயலகத்திற்கு உள்ளே வருபவர்கள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டும். வளாகத்திற்குள் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க அனுமதி கிடையாது மற்றும் தலைமைச் செயலகம் சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்படாத வண்ணம் கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    குறிப்பாக முதல்வர் மற்றும் அமைச்சர் வாகனங்கள் செல்லும் பொழுது வழிமறித்து மனு அளிப்பதோ ஆர்ப்பாட்டங்கள் நடத்த அதை தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையினர் மீதான விமர்சனங்களை தவிர்க்கும் வகையில் விழிப்புடன் செயல்பட வேண்டும்” என சென்னை காவல்துறை ஆணையர் அருண் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    accident Assembly session Circular DMK karur stampede Police Commissioner Arun TVK கரூர் கூட்டநெரிசல் காவல் ஆணையர் அருண் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சுற்றறிக்கை தவெக திமுக விபத்து
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு… தவெக உறுப்பினர் கைது…
    Next Article தவெகவுக்கு சிக்கல் – சிபிஐ விசாரணை கேட்ட மனு தள்ளுபடி
    Editor TN Talks

    Related Posts

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    July 15, 2026

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    July 15, 2026

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.