தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற குமரேசன் (32) என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று மாலை கூடலூர் குமுளி சாலையில் கூடலூர் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டபோது, அவர் கையில் வைத்திருந்த சாக்குப் பையில் 5 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டனர். உடனடியாக காவல்துறையினர் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அந்த நபரை கைது செய்தனர்.

விசாரணையில், கைதானவர் தேனி மாவட்டம் கம்பம் வடக்குப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் என்பதும், கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சாவைக் கடத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, குமரேசன் மீது வழக்குப் பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கேரளப் பகுதியில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version