தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பிற்குமே பெரும் அதிர்ச்சியை அளித்து வரும் நிலையில், சென்னையின் ராயபுரம் தொகுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் நிகழ்ந்துள்ளது. அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட ராயபுரத்தில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் இத்தொகுதியில் டெபாசிட்டை இழந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொகுதியில் களம் இறங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தாமு, ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று வந்து இறுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார். ஒரு புதிய கட்சியின் வேட்பாளர், பலமுறை அமைச்சராக இருந்த ஒருவரை இவ்வளவு பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தவெக-வின் அசுர வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தாமு முதலிடத்தைப் பிடித்து ராயபுரத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இதேபோல், காரைக்குடியில் போட்டியிட்ட சீமான் வெறும் 16,646 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். டெபாசிட்டை பெற 3-ல் 1 பங்கு வாக்குகள்(18,000+) தேவை. ஆனால் சீமான் 16,000+ வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இத்தொகுதியில் 56,000-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தவெக வேட்பாளர் பிரபு வெற்றி பெற்றுள்ளார். விஜய்யின் எழுச்சி சீமானுக்கு பாதகமாக அமையும் என்ற கணிப்பு நிரூபணமாகி உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version