2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய கேள்வியாக எழுதியுள்ளது. இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சபாநாயகர் அப்பாவுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது..

இதனை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக பாஜக தவெக என மூன்று பேரும் நம்முடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியதாகவும், பெரும்பாலான நிர்வாகிகள் திமுக வேண்டாம் அது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த முடிவை ஓ பன்னீர்செல்வம் கைவிட்டு விட்டதாக தெரிகிறது.

இருப்பினும், பாஜகவை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வத்தை தங்கள் கட்சியில் இணைத்து தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திவிட்டு அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அதனை தொடர்ந்து ஓ பன்னீர் செல்வத்திற்கு ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் பதவியை வழங்குவதாக கூறியதாக தெரிகிறது..

அதற்கும் பெரும்பாலான நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை என தெரிகிறது கடைசியாக தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து அமைப்பாக போட்டியிடலாம் நம்முடைய பலம் என்ன என்பதை என்.டி.ஏ கூட்டணிக்கு காட்ட வேண்டும் என பல நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version