Close Menu
    What's Hot

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»”மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதித்திடுக”..! தமிழக அரசு மனு தாக்கல்..!
    தமிழ்நாடு

    ”மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதித்திடுக”..! தமிழக அரசு மனு தாக்கல்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், இதனை தடுக்க தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகள் நலனை காத்திடவும் முதலமைச்சர் விஜய், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தலைமைச் செயலகத்தில் கடந்த 25-ம் தேதி தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மூத்த வழக்கறிஞர் உமபதி, காவிரி தொழில்நுட்ப மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவின் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் சட்ட வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தனர். கடந்த 27-ம் தேதி டெல்லியில் முதலமைச்சருடன் மூத்த வழக்கறிஞர் உமாபதி ஆலோசனை நடத்தினார்.

    அதன்படி, நீதிபதிகள் நியமனத்தில் முனைவர் பட்டம் பெற்ற ராம் சங்கரிடம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,

    மேகதாது அணை திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும். இதனால் அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், பாதுகாக்கப்பட்ட விலங்கினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருப்பதை சட்டவிரோதம் என்று அறிவித்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    மேகதாது அணைக்கான உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எவ்வித நடவடிக் கைகளையும் எடுக்காமல் இருக்க கர்நாடக அரசு, காவிரி நீர் வாரி நிகம் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுச் சூழல் விதிகளை மீறும் மேகதாது அணை திட்டத்துக்கு சூழல் அனுமதியை தர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..! இன்றைய நிலவரம் என்ன?
    Next Article விதிகளை மீறிய இஸ்ரேல்..! லெபனான் மீது குண்டு வீச்சு..! குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    July 22, 2026

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    July 22, 2026

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. ஐரோப்பிய யூனியனில் முதல் நாடாக சட்டம் இயற்றியது பிரான்ஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.