சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணைய‌ அதிகாரிகள் தமிழகத்துக்கு அடுத்த மாதம் தொடக்கத்தில் வருகை தர உள்ளனர்.

பீகார் தேர்தலை தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதேபோல், அரசியல்கள் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சார பொதுக்கூட்டங்கள் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தநிலையில், தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணைய‌ அதிகாரிகள் தமிழகத்துக்கு அடுத்த மாதம் தொடக்கத்தில் வருகை தர உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் , காவல்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை, சி ஆர் பி எப் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்

தமிழகத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் முடிவு பெற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய வருகிற 18-ஆம் தேதி வரை கால அவகாசம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது . இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இருப்பினும், மார்ச் முதல் வாரத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version