அன்புமணி தரப்பு பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. எனவே டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது. தி.மு.க.வுடனும், த.வெ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அணியில் இணைப்பதற்கான முயற்சியும் நடைபெறுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது.

இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், என் டி ஏ கூட்டணியில் இருந்து தாங்கள் இன்னும் விலகவில்லை என கூறியிருந்தார். அதேபோல், திமுக கூட்டணியில் சேரவேண்டும் என்று பேச்சு வார்த்தை நடத்திவருவதாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார்,

இதுதொடர்பாக வட்டாரங்களிடம் கேட்டறிந்தபோது, அன்புமணிக்கு எதிரான மனநிலையில், இருக்கும் ராமதாஸை சமாதானம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி வருவதே காரணம் என கூறப்படுகிறது. அதாவது, தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்த சண்முகம், பாமக ஒன்றிணைப்பு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு உள்ளிட்டவைகள் குறித்து பேசியதாகவும் இதனால், ராமதாஸ் மன மாறி வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version