Author: Editor web2

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது. மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது. சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா? உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல…

Read More

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழலில், அவர்களுக்கு பரோல் வழங்குவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது என்ற முக்கிய சட்டக் கேள்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் போது, அவர்களுக்கு பரோல் வழங்கலாமா என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இதனால் இந்த விவகாரம் சட்டரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு அமர்வு, மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தாலும் பரோல் வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறிய நிலையில், மற்றொரு அமர்வு அதற்கு மாறான கருத்தை பதிவு செய்தது. இந்த முரண்பட்ட தீர்ப்புகளால் ஏற்பட்ட சட்டத் தெளிவின்மையை நீக்குவதற்காக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.…

Read More

ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு தவெகவினரால் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், Reels எடுத்து Post செய்ய தான் ‘சிங்கப்பெண்’ பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,”உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் “யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர். அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித்…

Read More

இயக்குநர் பாரதிராஜாவின் உடல், அவரது விருப்பப்படி  அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படும் என அவரது  குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் கிராமிய மண்வாசனையை உலக அரங்கில் கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவையடுத்து அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மலேசியாவில் இருந்த அவரது மகள் ஜனனி சென்னை வந்து சேர்ந்துள்ளார். குடும்பத்தினருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, பாரதிராஜாவின் நீண்டநாள் விருப்பப்படி அவரது சொந்த ஊரிலேயே உடலை நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, இயக்குநர் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை 7 மணி வரை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர் அவரது உடல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பகுதியில் அமைந்துள்ள அவரது…

Read More

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படைப்பாளியாகவும், படைப்பாளிகளின் உரிமைக்காக போராடிய முன்னோடியாகவும் பாரதிராஜாவை நினைவுகூர்ந்துள்ளதோடு, “காலத்தால் அழியாத காவிய நாயகன்” எனவும் புகழஞ்சலி செலுத்தி உள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ,”இன்னும் ஆயிரமாண்டுகள் கழித்து தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதினாலும், அதில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முதன்மைப் பெயர் — இயக்குநர் இமயம் பாரதிராஜா! மிகைப்படுத்தப்பட்ட கதைகளும், செயற்கையான ஒப்பனைகளும், மினுமினுக்கும் பட்டாடைகளும் உலா வந்த கற்பனைத் உலகிற்குள் தமிழ் சினிமா புதைந்து கிடந்தபோது, அதை மீட்டெடுத்த தீர்க்கதரிசி அவர். அவரது வருகைக்குப் பின், அந்தப் போலிப் பிம்பங்கள் யாவும் கனவாய் மறைந்தன. எண்ணெய் கசியும் எதார்த்த முகங்கள், வண்ணமிழந்த பஞ்சுப் புடவையில் சுற்றித்திரிந்த எளிய கிராமத்துப் பெண்கள், திறந்த மார்போடு உழைக்கும் மனிதர்கள், நாவில் உண்மையும் கேட்டறியா வட்டார வழக்குகளும் எனத்…

Read More

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக, கிராமத்து மண்வாசனையை உலகறியச் செய்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், அங்கு நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. பாரதிராஜாவின் நீண்டகாலத் திரையுலகப் பயணத்திலும் வாழ்விலும் நெருங்கிய நண்பராக விளங்கிய இயக்குநர் கங்கை அமரன், பாரதிராஜாவின் உடலைப் பார்த்துக் கதறி அழுததோடு, அவரது மனைவியிடம் ஆவேசமும் ஆதங்கமுமாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் அங்கிருந்தோரை உருக வைக்கிறது. பாரதிராஜா மனைவியிடம் வெடித்த கங்கை அமரன் பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு, தேனியில் இருந்து பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா, தனது கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். கணவரின் உடலைப் பார்த்துக் கலங்கி நின்ற சந்திரலீலாவைக் கண்டதும், அங்கிருந்த இயக்குநர் கங்கை அமரன்…

Read More

தமிழ் சினிமாவை ஸ்டுடியோவின் நான்கு சுவர்களுக்குள் இருந்து கிராமத்து மண்வாசனைக்குக் கூட்டிவந்த பெருமை இயக்குநர் இமயம் பாரதிராஜாவையே சேரும். அவரது படங்களில் கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ, அதைவிட ஒருபடி மேலாக அவர் அறிமுகப்படுத்தும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். பாரதிராஜாவின் கைவண்ணத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, பிற்காலத்தில் தங்களின் அசாத்திய நடிப்பால் தென்னிந்தியத் திரையுலகையே அசைத்துப் பார்த்த டாப்-10 முன்னணி கதாநாயகிகளின் தொகுப்பு இதோ. ஸ்ரீதேவி (மயிலு – 16 வயதினிலே, 1977): குழந்தை நட்சத்திரமாகப் பல படங்களில் நடித்திருந்தாலும், ஸ்ரீதேவி என்கிற மகா நடிகையை ‘மயிலு’ என்ற பாத்திரத்தின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் காலத்திற்கும் அழியாதபடி செதுக்கியவர் பாரதிராஜா. அவரது அறிமுகப் படமான ’16 வயதினிலே’ திரைப்படமே ஸ்ரீதேவியின் திரையுலகப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ராதிகா  (பாஞ்சாலி – கிழக்கே போகும் ரயில், 1978): பாரதிராஜாவின் இரண்டாவது கண்டுபிடிப்பு ராதிகா. ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில்…

Read More

பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை இன்று முதல் தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வருகிறது. முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த இந்த புதிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 70 சிங்கப்பெண் படைகள் மாநிலம் முழுவதும் களமிறங்குகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாகத் தடுக்கவும், அவசர காலங்களில் உடனடி காவல் உதவியை வழங்கவும் தமிழக அரசு உருவாக்கியுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு போலீஸ் படை இன்று முதல் மாநிலம் முழுவதும் செயல்படத் தொடங்குகிறது. முதலமைச்சர் விஜய் அண்மையில் சென்னை மாநகரில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். திட்டத்தின் கீழ் மொத்தம் 270 சிங்கப்பெண் படைகள் உருவாக்கப்பட உள்ள நிலையில், முதல் கட்டமாக 70 படைகள் இன்று முதல் பணியில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு சிங்கப்பெண் படை செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் மட்டும் 12 சிங்கப்பெண் படைகள்…

Read More

முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக இன்று தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். தமிழ்நாடு முதல்வர் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், கடந்த மே மாதம் 27 ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில், டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். அதன்படி, தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் பயணமாக, இன்று காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஒன்றிய உள்துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை இந்த முறை முதல்வர் விஜய் சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே,…

Read More

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்ட அறிவிப்புக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த சபாநாயகர், எடப்பாடி பழனிசாமி அளித்த மன்னிப்பு கடிதத்தின் அடிப்படையில் 21 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது என இன்று அறிவித்தார். அதே நேரத்தில், பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா மற்றும் சத்தியபாமா ஆகிய 4 பேரின் தகுதி நீக்க மனுக்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில், சபாநாயகர்  பிரபாகரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முன்னாள்…

Read More