Author: Editor web2

ஏழை மக்கள் பயன்படுத்தும் பச்சைப் பாலின் விற்பனையை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பது நியாயமற்றது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”சென்னையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஒரு நாளைக்கு 14 லட்சம் லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 7.5 லட்சம் லிட்டர் பச்சைப் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தற்போது ஆவின் பச்சைப் பால் விற்பனை 3.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த சில நாள்களின் ஆவின் பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால் அது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். ஆவின் பச்சைப் பாலின் உற்பத்திச் செலவு லிட்டருக்கு ரூ.51 ஆவதாகவும், ஆனால் சந்தையில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டர் பச்சைப் பால் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 7…

Read More

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம் பெற்றிருந்த பாஜக, 27 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஒட்டுமொத்தக் கூட்டணியும் சரிவைச் சந்தித்ததுடன், பாஜக வெறும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே தட்டுத்தடுமாறி வெற்றி பெற முடிந்தது. இந்த மோசமான தேர்தல் தோல்வி, கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் அளித்தது. குறிப்பாக, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் வியூகங்களும், கட்சியை வழிநடத்திய விதமும் தோல்விக்கு முக்கியக் காரணம் என டெல்லி தலைமை கருதுவதாக பாஜக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமித்ஷா கறார் இந்த நிலையில், இந்தத் தோல்வி குறித்து விவாதிப்பதற்காகவும், தமிழக பாஜகவின் அடுத்தகட்டப் பயணம் குறித்தும் ஆலோசிக்க நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் அவசர மையக்குழு (Core Committee) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் தற்போதைய…

Read More

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நினைவூட்டும் விதமாக சேலத்தில் அதே பாணியில் வறுமையில் வாடிய 50-க்கும் மேற்பட்ட பெண்களைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்டுள்ள அதிர்ச்சி விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிக்கும் தவெக பிரமுகர்கள் உதவி செய்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழகத்தைச்  சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரைப் பிடித்துக் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எழுந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தவெகவினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், தற்போதைய சேலம் பாலியல் வன்கொடுமை நிகழ்விலும் தவெக நிர்வாகி ஒருவர் சிக்கி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏழை பெண்களுக்கு குறி சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், வேலைவாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் கடுமையான பொருளாதாரக் கடன் சுமையில் தவிக்கும் பெண்களைத்…

Read More

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்வி, அக்கட்சியின் உட்கட்டமைப்பில் இருந்த பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது. தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக்குழு, தனது அறிக்கையை திமுக தலைவரான மு.க. ஸ்டாலினிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்  அறிவாலய வட்டாரத்தில் கசிந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் திமுகவின்  தேர்தல் தோல்விக்கு குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான 6 காரணங்கள் இங்கே… மகளிர் உரிமைத் தொகை ஏமாற்றம் திமுக அரசுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டமே, இந்தத் தேர்தலில் அதற்குப் பின்னடைவாக மாறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் “அனைத்துத் தகுதியுள்ள பெண்களுக்கும்” உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, பின்னர் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்தத் தொகை கிடைக்காமல் போனது. இதனால், தங்களுக்குத் தொகை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில்…

Read More

ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதியன்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது மரபு. ஆனால், மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் அணை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், தண்ணீருக்கு முறையான வழி செய்யாமல், “ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல” வெறும் குறுவை சிறப்புத் தொகுப்பை மட்டும் அறிவிக்கும் இந்த ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தற்போது தனது சொந்த வேண்டுதலுக்காகக் கர்நாடகா மாநிலத்திற்குச் சென்றுள்ளார் என்று திமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று ஜூன் 12. கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு,…

Read More

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டுக்கான குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026” செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் போதுமான அளவில் இல்லாததாலும், குறுவை சாகுபடியில் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இந்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் வடிகால் குழாய் கிணறுகள் மூலம் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் சுமார் 52.72 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு இருப்பதாகவும், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தான் ஏற்கெனவே வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் அந்த ஒரு இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிக எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட தவெகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு மாநிலங்களவை எம்.பி. இடத்தை ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்தார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சி.வி.சண்முகம் தனது உறுப்பினர்…

Read More

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய ஒரு புதிய பரிணாமத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் தந்த அதிர்வலைகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய ஆட்சி அமைப்பும் முந்தைய அரசியல் கூட்டணிகளைப் புரட்டிப்போட்டுள்ளன. இந்த அரசியல் புயலின் மையப்புள்ளியாக இப்போது இருப்பது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் அசைக்க முடியாத தேர்தல் கூட்டணியாகத் திகழ்ந்த இந்த அணியிலிருந்து, தற்போது இடதுசாரித் தோழமைகளும் விடைபெறத் தொடங்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர்களின் தற்போதைய அறிவிப்புகள், திமுகவின் மிக முக்கியமான வாக்கு வங்கியிலும், அரசியல் அரணிலும் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளதை உறுதி செய்கின்றன. தமிழக தேர்தல் அரசியலில் கொள்கைப் பிடிப்பு மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் வாக்கு பலத்திற்கு எப்போதும்…

Read More

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் உடற்திறன் மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், உடற்கல்வி நேரத்தை (PT Period) எந்த காரணத்திற்காகவும் ரத்து செய்யக்கூடாது என்று பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு விளையாட்டும் உடற்கல்வியும் அவசியம் என்பதால், பள்ளிகளில் வாரத்திற்கு ஒதுக்கப்படும் பாடவேளைகளில் குறைந்தது 8 பீரியட்கள் உடற்கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றார். “எந்தவொரு பள்ளியிலும் பிடி பீரியட் இனி ரத்து செய்யப்படக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ள அமைச்சர், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதனை படைப்பதே அரசின் நீண்டகால இலக்கு எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் சட்டச் சிக்கல்கள் இன்றி விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.…

Read More

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது. மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது. சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா? உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல…

Read More