Author: Editor web2
தமிழக முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூக நீதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூக நீதி மற்றும் பட்டியலின மக்களின் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்பு தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணிகளில் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசியலமைப்புச் சட்டம் 16(4-A)-ஐ அமல்படுத்தும் வகையில் தனிச் சட்டம் கொண்டுவரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தும் வகையில் புதிய பஞ்சமி நிலஉடைமைச் சட்டம்…
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கூட்டணி அரசியல், ஸ்டெர்லைட் விவகாரம், தனது புதிய நூல் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2.45 மணி அளவில் முதலமைச்சர் விஜயை சந்தித்தார் வைகோ. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தவெக உடன் கூட்டணிக்கு வருமாறு வைகோவுக்கு விஜய் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விஜய்யுடன் பேசியது என்ன என்பது குறித்து விளக்கினார். தூத்துக்குடியில் “கிரீன் காப்பர்” என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல்கள் வருவதாகக் கூறிய அவர், எந்த சூழலிலும் அந்த ஆலைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய உரைகளை…
நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீட்-யுஜி மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு, மோசடி மற்றும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 ஆம் தேதி வரை தற்காலிக கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் ஏற்கனவே வெளியிடப்பட்ட பதிவுகளை திருத்தும் வசதியையும் ஜூன் 30 ஆம் தேதி வரை முடக்குமாறு டெலிகிராமுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கே பூட்டு போடுவது போன்றது இந்த டெலிகிராம் தடை” என விமர்சித்துள்ளார். பல லட்சம் மாணவர்கள் பல ஆண்டுகளாக குறிப்புகள், மாதிரி தேர்வுகள், கலந்துரையாடல்கள் மற்றும் தேர்வுத் தயாரிப்புகளுக்காக டெலிகிராமை பயன்படுத்தி…
தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET) தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 3-ந்தேதி நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான மறுதேர்வு வருகிற ஜூன் 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனையொட்டி, நெல்லை மாவட்டத்தில் தேர்வு மையங்களை தயார் செய்யும் முன்னேற்பாடு பணிகளும், முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு வழிகாட்டுதல்களுடன் கூடிய தீவிரக் கண்காணிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வினாத்தாள்களை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வருவது குறித்த ஒத்திகை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நெல்லை மாநகரப் பகுதியான கே.டி.சி. நகர், அரசு பல்நோக்கு மருத்துவமனை, ஐகிரவுண்டு பழைய ஆஸ்பத்திரி மற்றும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக வட்டமடித்தது. பின்னர் அந்த ஹெலிகாப்டர் பாளையங்கோட்டை ஆயுதப்படை…
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை நெருங்கும் நிலையில், கட்சிக்குள் புதிய அதிகாரப் போட்டி தலைதூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மாவட்டச் செயலாளர் பதவிகளை கைப்பற்றுவதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்துள்ள மூத்த தலைவர்கள் மத்தியில் முட்டல் மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டபோது, பல மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்டகாலமாக செயல்பட்டவர்களே மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். கட்சி உருவாக்கம், உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் சட்டமன்றத் தேர்தலின்போது, மாவட்டச் செயலாளர் பதவியில் இல்லாத பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களில் பலர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாகவும், சிலர் அமைச்சர்களாகவும் உயர்ந்தனர். இதன் பின்னர், “தேர்தலில் வெற்றி பெற்ற நாங்களே மாவட்டத்தின் அரசியல் முகம்” என்ற அடிப்படையில் மாவட்டச் செயலாளர் பதவியையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என…
கோவை மாநகராட்சியில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை அரங்கில் வைப்பது தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி அதிமுக கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியின் சாதாரண மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் விக்டோரியா ஹால் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியபோது அரங்கில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படம் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும் அரங்கில் வைக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதேநேரத்தில், பெருந்தலைவர் காமராஜரின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் எதிராக முழக்கமிட்டதால் கூட்ட அரங்கில் பதற்றமான சூழல் நிலவியது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்திற்குப் பிறகு, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலையிட்டு, அரசாணையின்படி…
தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் போக்குவரத்துக் கழகங்களின் நிதிச் சுமை குறித்து குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்து கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தமிழ்நாட்டில் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து தேவையை இவை பூர்த்தி செய்து வருகின்றன. அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் கடைசியாக 2018 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த எட்டு ஆண்டுகளாக டீசல், உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கணிசமாக அதிகரித்த போதிலும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கட்டண உயர்வு மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையில், தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், போக்குவரத்துத் துறை ரூ.72,667 கோடி நட்டத்தில் இயங்கி வருவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். மேலும், அரசுப் பேருந்துகளை ஒரு கிலோமீட்டர் இயக்க ரூ.70.61…
திருக்கோயில்களில் பக்தர்களுக்கு நியாயமான விலையில் தரமான பூஜைப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பூஜைப் பொருட்கள் விற்பனையில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்யவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருக்கோயில்கள் மற்றும் கோயில் வளாகங்களில் செயல்படும் அனைத்து பூஜைப் பொருள் விற்பனைக் கடைகளும் தங்களது பொருட்களுக்கான நியாய விலைப்பட்டியலை கடையின் முன்பாக கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக பணம் வசூலிக்கக் கூடாது என்றும் அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், தரமான பூச்சரம், பூமாலைகள், தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, எண்ணெய், நெய் உள்ளிட்ட அனைத்து பூஜைப் பொருட்களும் இறைவனுக்கு சமர்ப்பிக்கத் தகுந்த தரத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன அல்லது தரம் குறைந்த பொருட்களை பக்தர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் கேட்காத…
தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியதாகவும், வருவாய்ப் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மேலும், திமுக ஆட்சியில் வருவாய் உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், புதிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் நிதிச் சுமை அதிகரித்ததாகவும், மூலதனச் செலவினங்கள் குறைந்ததால் வளர்ச்சிக்கான முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கைகளில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வாணவேடிக்கை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையையும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையையும் மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது” என விமர்சித்துள்ளார். மேலும், “மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி…
தமிழக அரசின் நிதி மேலாண்மை மற்றும் பொது நிதி நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார். 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய ஐந்தாண்டு கால நிதித் தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதோ அல்லது அரசியல் ரீதியான விமர்சனங்களோ இன்றி, மாநிலத்தின் உண்மையான நிதி நிலையை ஆதாரங்களுடன் பொதுமக்கள் முன் வைப்பதே இந்த அறிக்கையின் முதன்மை நோக்கம் என அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மரிய வில்சன் தெரிவித்தார். இந்த வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் நிதி நெருக்கடிக்கு காரணமாக சொல்லப்படும் மிக முக்கியமான 6 அம்சங்கள் இங்கே… 1) இருமடங்காக உயர்ந்த கடனும் தனிநபர் கடன் சுமையும் கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய ஐந்தாண்டுகளில் தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் சுமை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தக் கடன்: கடந்த 2020-21…