Author: Editor web2

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும்  திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது என்றும் கூறியுள்ளார். ” அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் அணையை திறப்பார்கள். அதுவரை தமிழ்நாடு பாலைவனமாகும். ஆகையால் தீர்மானம் மட்டும் போதாது. தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் சரியான வழக்கறிஞர்களை வைத்து முறையாக வாதாட வேண்டும்” என குறித்து காட்பாடியில்  இன்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் தெரிவித்தார். ” கர்நாடகாவுக்கும் நமக்கும் எவ்வளவு பேசினாலும் அவர்கள் மேகதாதுவில் அணையைக் கட்ட வேண்டும் என்று தான் பேசுவார்கள். நான் கிருஷ்ணா முதல் கொண்டு 6,7 முதலமைச்சர்களிடமும் பேசிய உள்ளேன். தலைவர் கலைஞர் அவர்களும்…

Read More

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவை நிகழ்வுகளின் நேரலை ஒளிபரப்பு தொடரப்படாததை சுட்டிக்காட்டி அதிமுக கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக, தேர்தல் காலத்தில் மற்றும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று த.வெ.க. அரசு வலியுறுத்தியிருந்ததை நினைவூட்டியுள்ளது. ஆனால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான முக்கிய விவாதம் தொடங்கியபோது நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. “முழு நேரலை… முழு நேரலை… என்று கூறியது வெறும் உருட்டுதானா? ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்” என்று அதிமுக தனது பதிவில் விமர்சித்துள்ளது. மேலும், வெளிப்படையான ஆட்சியை வழங்குவதாக கூறிய அரசு, சட்டப்பேரவையின் முக்கிய விவாதங்களை மக்களிடம் கொண்டு செல்லும் விவகாரத்தில் ஏன் பின்வாங்குகிறது என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. “எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும்…

Read More

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் கடந்த சில ஆண்டுகள், அப்போதைய ஆளுநரான ஆர்.என். ரவிக்கும் அன்றைய திமுக அரசுக்கும் இடையிலான கடுமையான போர்க்களமாகவே காட்சியளித்தன. மேசையைத் தட்டுவது, வெளிநடப்பு செய்வது, உரையைப் புறக்கணிப்பது என முட்டல் மோதல்களையே கண்டு பழகிய தமிழக சட்டப்பேரவை, இன்று முற்றிலும் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்திற்குச் சாட்சியாக நின்றது. கடந்த மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது கூட்டத்தொடரான இன்று, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  ஆற்றிய உரை, மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே ஒரு ‘இணக்கமான வசந்த காலம்’ தொடங்கியுள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையின் நெகிழ்ச்சி ஆளுநர் உரை முடிந்த சில மணி நேரங்களிலேயே சென்னை ராஜ்பவன் (LOK BHAVAN) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பு, இந்த இணக்கமான சூழலை அடியோடு உறுதிப்படுத்தியது. “தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள்…

Read More

திமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஐந்து சட்ட மசோதாக்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடந்த மார்ச் 18-ம் தேதி ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அரசிதழ் வெளியீடு தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 16-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. அவற்றில் ஐந்து மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள மசோதாக்களில், திருச்சி, கடலூர் மற்றும் தேனி சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கும் சட்டத்திருத்தம் இடம்பெற்றுள்ளது. மேலும், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவில் பெற்றோர்-ஆசிரியர் சங்க பிரதிநிதியை உறுப்பினராக நியமிக்க வழிவகுக்கும் தமிழ்நாடு பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்டத் திருத்தமும் இதில் அடங்கும். அத்துடன், 28 மாவட்ட ஊரக…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை உயர்வை பதிவு செய்த நிலையில், மாலையில் திடீர் சரிவை சந்தித்தது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமான ஏற்ற, இறக்கங்களை சந்தித்தது. காலை வர்த்தகத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து விற்பனையான நிலையில், மாலை நேரத்தில் கிராமுக்கு ரூ.110 குறைந்தது. இதையடுத்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,11,600-க்கும் விற்பனையாகிறது. காலை நேரத்தில் சவரனுக்கு ரூ.240 உயர்வு ஏற்பட்டிருந்த நிலையில், மாலையில் ரூ.880 சரிந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக போக்கு ஆகியவை தங்க விலையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒரே நாளில் தங்கம் விலை ஏற்றத்தையும், இறக்கத்தையும் பதிவு செய்திருப்பது நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More

சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது மத்திய அரசு பின்னால் ஒளிந்து கொள்வது ஏன் என முதல்வர் விஜய்க்கு திமுக காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது. விவகாரத்தில் தேர்தலுக்கு முன் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து தற்போதைய தமிழக அரசு பின்வாங்கி வருவதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி குற்றம்சாட்டியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று தவெக அரசின் உரையை ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.அதில்  ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் வெளியானதும், தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்காய்வு (Social Justice Audit) மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது,  சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும். அதற்கான தரவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வை மேற்கொள்ளும். இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி திட்டங்கள் பயனாளர்களை எவ்வாறு சென்றடைகின்றன என்பது ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போது அரசியல் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது. காரணம்,…

Read More

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் இன்று உரையாற்றிய நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுநர் உரை குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளது. ஆளுநரின் உரை குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்ட மரபு மீறல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வழக்கம் போல முதலிடம் பெற்றது. பேரவை மரபு நிலை நாட்டப்பட்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தமிழ்நாடு நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கப்படும் என அறிவித்திருப்பதும், இந்தி மொழியை திணிப்பதன் மூலம் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை…

Read More

தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கியது. இந்த கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார். ஆளுநர் அர்லேகர் அரசு உரையை எந்த மாற்றமுமின்றி ஆளுநர் வாசித்ததாகவே தெரிகிறது. ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: 1. மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 2. தமிழ்நாட்டின் கடன் சுமையை கட்டுப்படுத்த நடவடிக்கை. 3. மத்திய அரசிடம் நிதி பங்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தப்படும். 4. 200 யூனிட் இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படும். 5. பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை அமைக்கப்படும். 6. போதைப்பொருள் ஒழிப்புக்கு தனிப்படை உருவாக்கப்படும். 7. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 8. சிறு, குறு விவசாயிகளுக்கு ₹75,000 வரை கடன் தள்ளுபடி. 9. கூட்டுறவு வங்கிகள் வலுப்படுத்தப்படும். 10.…

Read More

தமிழக சட்டமன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி வாசிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக லோக் பவன் வெளியிட்டுள்ள பதிவில், “ “தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது. மேலும், முதல் முறையாக சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல. ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை…

Read More

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு நாளை (19-ந் தேதி) முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். சென்னை, தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. தமிழக பொறுப்பு கவர்னரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனது உரையை ஆங்கிலத்தில் பேசினார். சட்டசபை கூட்டம் அவர் பேசி முடித்ததும், கவர்னர் உரையை தமிழில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் இன்றைய சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. கவர்னர் உரைக்கு நன்றி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர்…

Read More