Author: Editor web2

2026, ஜூன்  22 முதல்  அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் முதலமைச்சரின் ’தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அமலாவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு ஆவணத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள முக்கிய நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானதாக கருதப்படும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தமிழர் பாரம்பரியத்தில், “தாய்மாமன் சீர்” என்ற மரபின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.…

Read More

மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றம் அமைக்க கோருவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும்…

Read More

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜயின் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறிய “குட்டிக்கதை” மற்றும் சட்டசபையில் அவர் நிகழ்த்திக் காட்டிய ஆக்சன் காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகச் சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு  முதலமைச்சர் விஜய் விரிவாக பதிலளித்துப் பேசினார். அப்போது திமுகவைக் குறிவைத்துத் தனது பாணியில் ஒரு குட்டிக்கதையைக் கூறினார். “ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் வெயிலில் கண்ணுக்கு மேலே கை வைத்து யாரையோ தேடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு சிறுவன் ‘என்ன தேடுகிறீர்கள்?’ எனக் கேட்க, ‘உங்க அப்பா இங்கிருப்பதாகச் சொன்னார்கள், அவரைக் காணவில்லை, தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்றாராம் அந்தப் பெரியவர்” என்று விஜய் கூறினார். மேலும், “எங்களுக்கும் இதுபோலச் சம்பந்தமில்லாத கதைகள் பேசத் தெரியும், யாரும்…

Read More

மே 2026-ல், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கமே பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது. “சி. ஜோசப் விஜய் என்னும் நான்…” என்று கம்பீரமாகத் தொடங்கி, தமிழகத்தின் 22-வது முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் நடிகர் விஜய். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் முடிந்த அடுத்த சில நொடிகளில், மேடையை விட்டு நகர்ந்த விஜய் நேராகத் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை நோக்கித் திரும்பினார். ஒரு எளிய, ஆனால் ஆழமான கேள்வியை அவர் கேட்டார்: “அப்பா, உங்க கனவை நான் கடைசியில நெஜமாக்கிட்டேனா?” அதற்கு அவரது தந்தை கண்கள் கலங்க, தலையசைத்து “ஆம்” என்று பதிலளித்ததாக விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அண்மையில் ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த ஒற்றைத் தலையசைப்புடன், கடந்த இரண்டு தசாப்தங்களாக அந்த குடும்பத்திற்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு நீண்ட அரசியல் தேடல் மற்றும் கனவின் வட்டம் முழுமையடைந்தது. 2009-ல் விதைக்கப்பட்ட விதை தமிழக மக்கள்…

Read More

மேகதாது விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த  தங்கம் தென்னரசு, ”மேகதாது விவகாரம் குறித்து அதிமுகவினர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேகதாது விவகாரத்தில் திமுக சில திருத்தங்களை கூறியது. அதன்பின் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்டா மக்களுக்காக இந்த திருத்தம் மிகவும் அவசியமானது” என்றார். மேகதாதுவில் அணை கட்ட கூடாது எனப் பல முறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், அனைத்து கட்சி கூட்டங்களிலும் நமது எதிர்ப்பை நாம் தெரிவித்து உள்ளதாகவும் கூறிய அவர், ஆனால் பிடிவாதமாக அணையை கட்டுவோம் என கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனை கவனமாக கையாள வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் பெரிய நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார். அதேபோல் மேகதாது விவகாரம் என்பது உச்சநீதிமன்றதில் கூட…

Read More

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாளில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றியதாவது: ஆளுநர் உரை ஆளுங்கட்சி உரையாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் வாசித்த 37 நிமிட உரையில் 37 உச்சரிப்பு பிழைகள் இருந்தது. இது காதில் ஈட்டி வந்து பாய்ந்ததுபோது இருந்தது என்றார். பிரேமலதாவின் உரையை இடைமறித்த சபாநாயகர்,”வேறு மொழியை தாய் மொழியாக கொண்ட ஆளுநர் அர்லேகரை தமிழை சரியாக உச்சரிக்கவில்லை என விமர்சிக்கக்கூடாது” என்றார். மேலும் அவர்,”வேறு மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் நமது தலைவரகளின் பெயர்களை உச்சரிப்பதையே நாம் பாராட்ட வேண்டும். தமிழை கற்க நமது ஆளுநர் ஆசைப்படுகிறார் என்பது நான் அவரை சந்தித்தபோது அறிந்தேன். உரையில் எந்த தலைவர் பெயரையும் தவிர்க்காமல் ஆளுநர் படித்ததே பாராட்டுக்கு உரியது. ஆளுநர் அர்லேகர் அன்றைய சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திக்கொடுத்தார், அவரை நாம் பாராட்ட வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய பிரேமலதா, பேரவையில் டம்ளருக்கு…

Read More

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய்களால் பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. அதில், 2026-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 2.63 லட்சம் பேர் தெருநாய்களால் கடிக்கப்பட்டதாகவும், 17 பேர் உயிரிழந்ததாகவும் வெளியான தகவல்களை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. மேலும், இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் விடக்கூடாது என்றும், அவற்றை உரிய பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த உத்தரவுகளை கண்காணிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம்…

Read More

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சகரணை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை முதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென  அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். மேலும் சிலருக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர். 2 தொழிலாளர்கள் பலி இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையிலும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும்  அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலியின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, இருவரை கைது செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.…

Read More

லெபனான் மீது இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி வரு​வது, அமைதி ஒப்​பந்த விதி​மீறல் என்​ப​தால் ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடு​வ​தாக ஈரான் அறி​வித்​துள்​ளது. ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த 2 மாதங்​களுக்கு மேலாக நீடித்து வந்த அமைதி ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை கடந்த வெள்​ளிக்​கிழமை முடிவுக்கு வந்​தது. இருதரப்பு இடையே ஏற்​பட்ட அமைதி ஒப்​பந்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான் ஆகியோர் கையெழுத்​திட்​டனர். அமைதி ஒப்​பந்​தத்​தில் 14 அம்​சங்​கள் இடம்​பெற்​றிருந்​தன. இதையடுத்து ஹார்​முஸ் ஜலசந்தி திறக்​கப்​பட்டு கப்​பல் போக்​கு​வரத்து தொடங்​கியது. அடுத்த 60 நாட்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்​கும் கப்​பல்​களுக்கு கட்​ட​ணம் வசூலிக்க மாட்​டோம். அதன்​பிறகு கட்​ட​ணம் வசூலிப்​போம் என்று ஈரான் கூறி வரு​கிறது. மேலும், ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யும் தனது முற்​றுகையை படிப்​படி​யாக விலக்கி கொள்ள முன்​வந்​தது. இதையடுத்து கச்சா எண்​ணெய் கப்​பல்​கள் ஈரான் துறை​முகம் செல்ல அனு​மதி அளிக்​கப்​பட்​டது. இதனால் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில்…

Read More

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான (NEET-UG) மறு தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் நடைபெறும் இந்தத் தேர்வை சுமார் 22.79 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேசிய தேர்வு முகமை (NTA) ஏற்பாடு செய்துள்ள இந்தத் தேர்வுக்காக நாடு முழுவதும் 5,440 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க நாடு முழுவதும் 1.38 லட்சத்திற்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் மற்றும் 51,311 சிக்னல் ஜாமர்கள் பயன்படுத்தப்பட்டு, டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரலையாகக் கண்காணிக்கப்பட்டது. வினாத்தாள்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன், ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆள்மாறாட்டத்தைத் தடுக்க டிஜிட்டல் கைரேகை மற்றும் முக அங்கீகாரம் (Facial Recognition) உள்ளிட்ட தீவிர பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறைகள் கட்டாயமாக்கப்பட்டன.கடுமையான ஆடைக் கட்டுப்பாடு மற்றும்…

Read More