Author: Editor web2
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்களுக்கு சத்துணவுக்கு பதிலாக பிஸ்கட் வழங்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களைக் கூட முறையாக நிர்வகிக்க முடியாத அரசாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். விளாத்திகுளம் பள்ளியில் சுமார் 40 மாணவர்கள் காலை உணவு கிடைக்காமல் தவித்ததாகவும், பின்னர் அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும், மாணவர் எண்ணிக்கை உயரும்போது அதற்கேற்ப உணவு ஏற்பாடுகளை…
திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கட்சி ரீதியான களஆய்வுக் குழுவின் முழுமையான அறிக்கை தற்பொழுது கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மற்றும் உட்கட்சி நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் மாவட்ட வாரியாக கட்சி மறுசீரமைப்பு குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கட்சியின் நிர்வாக வசதியை மேம்படுத்தவும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் துரிதப்படுத்தவும் இந்த ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி திமுகவில் அமைப்பு ரீதியாக 78 கட்சி மாவட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தொகுதிப் பரப்பளவு மற்றும் உள்ளூர் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த 78 மாவட்டங்களை 120 கட்சி மாவட்டங்களாகப் பிரிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடிப் பிரிப்பின் மூலம், கூடுதல் மாவட்டச் செயலாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும். நீண்ட காலமாக ஒரே பொறுப்பில் இருக்கும்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில பாஜகவின் எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்து கட்சியின் தேசிய தலைமையகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் தலைமையில் தமிழக பாஜக மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் செயல்பாடு, தோல்விக்கான காரணங்கள், வாக்கு வங்கி நிலவரம் மற்றும் தமிழகத்தில் கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் அமித் ஷா தமிழகம் வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை அல்லது கோவையில் நடைபெறவுள்ள மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில்…
“எதிர்காலத்தில் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் சண்முகத்தின் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சண்முகம், திமுக மற்றும் அதிமுகவுடன் சிபிஎம் மாறி மாறி கூட்டணி அமைப்பதும், எதிர்ப்பதும் அக்கால அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தது என்று தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணிகள் என்பது இருதரப்புக்கும் வெற்றி மற்றும் அரசியல் பலன் அளிக்கும் ஏற்பாடாகும் என்றும், ஒரு கட்சியின் கூட்டணி முடிவை மற்றொரு கட்சி “துரோகம்” எனக் கருத முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், “கூட்டணியில் சேர்த்த திமுக வெற்றிக்கு பலம் பத்தாததால்தான் கடைசி நேரத்தில் தேமுதிக போன்ற கட்சிகளை திமுக தனது அணியில் சேர்த்தது. எனவே ‘எங்களால் நீங்கள் ஜெயித்து, உங்களால் நாங்கள் ஜெயித்தோம்’ என்பதே யதார்த்தம்.…
திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் பயணம் செய்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த நபரை சில பெண்கள் செருப்பால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமி ஒருவர், மதுரையிலிருந்து சேலம் நோக்கி திண்டுக்கல் வழியாகச் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, பேருந்து நடத்துனரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், நடத்துனர் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிறுமி தனது செல்போன் மூலம் உறவினர்களை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பேருந்து திண்டுக்கல் அருகே வந்தபோது சிறுமியின் உறவினர்கள்…
இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்ற செய்தி சர்வதேச அரங்கில் நமக்குக் பெருமையைத் தரலாம். ஆனால், இந்த அதிரடி வளர்ச்சியின் பின்னால் இருக்கும் ஒரு ஆபத்தான பலவீனத்தை அண்மையில் வெளியாகியுள்ள 2025-26 நிதியாண்டு இறக்குமதித் தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. ஒரே ஆண்டில் 776 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹75 லட்சம் கோடி அளவிற்குப் பொருட்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. உலக அளவில் ஒட்டுமொத்த இறக்குமதியில் நாம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளோம். இது ஏதோ ஒரு வணிகச் சாதனை அல்ல, மாறாக இந்தியாவின் பொருளாதாரத் தன்னாதிக்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி என்று உலகளாவிய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிதித்துறை நிபுணர்கள் தங்களின் கவலைகளைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். வர்த்தகப் பற்றாக்குறையும் இந்திய ரூபாயின் வீழ்ச்சியும் பொருளாதார வல்லுநர்களின் மிக முக்கியமான கவலை, மிதமிஞ்சிய…
ரயிலில் டிக்கெட் இல்லாமல் ‘ஓசி’ பயணம் செய்பவர்களுக்கு பயண கட்டணத்துடன் சேர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் ரயில்வே சட்டம் 1989-ன் படி ரூ.250 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தால் விதிக்கப்படும் அபராதத்தொகையை ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தொலை தூர ரயில்களிலும் பயணக் கட்டணத்துடன் ₹500 அபராதம் வசூலிக்கப்படும். இதேபோல, நடைமேடை டிக்கெட் எடுக்காதவர்களுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட இந்த அபராத தொகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தால்… இதேபோல, பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.2,500 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்தால் ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆகவும், ரயில் மற்றும்…
தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை (22-06-2026):…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்த முடிவால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ள திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கம்யூனிஸ்ட்டுகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவளித்ததன் பின்னணியில் உள்ள நியாயங்களையும், தங்களின் அரசியல் நிலைப்பாட்டையும் விரிவாக விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆளுநரின் இழுபறியும் இடதுசாரிகள் முன்னிருந்த வாய்ப்புகளும் ”அறுதிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், தவெக 108 இடங்களை மட்டுமே பெற்றிருந்ததால், பெரும்பான்மை ஆதரவுக் கடிதம் இன்றி ஆட்சி அமைக்க ஆளுநர் முதலில் முட்டுக்கட்டை போட்டார். பெரும்பான்மையை ஆளுநர் மாளிகையில் அல்ல, சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வழிகாட்டியாக இருந்தபோதும் இந்த இழுபறி…
மேகேதாட்டு அணை பிரச்சினையில் முதல்வர் விஜய் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ மேகேதாட்டு அணை திட்டம் என் இதயத்துக்கு நெருக்கமானது. மேகேதாட்டு அணை கட்ட தமிழ்நாடு முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என கர்நாடக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மேகேதாட்டு திட்டமானது, சம நிலை அணைத் திட்டம். அங்கு நீரைத் தேக்கினால் வறட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு நீரை எளிதாக திறந்து விடலாம் என்றும் அவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்துள்ளார். காவிரி நதி பாயும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் அனுமதி இல்லாமல் கர்நாடகம் அணை கட்டக்கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். இதை மதிக்க வேண்டியது அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்ற முதல்வர் சிவக்குமாரின் கடமையாகும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், மேகேதாட்டுவில் அணையை கட்டியே தீருவோம் என்று…