Author: Editor web2

ஜூன் 25, இந்திய அரசியல் வரலாற்றில் ‘சமூக நீதி காவலர்’ என்று போற்றப்படும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் (விஸ்வநாத் பிரதாப் சிங்)  பிறந்த நாளாகும். வட மாநில நிலப்பிரபுத்துவ குடும்ப பின்னணியான மாண்டா (Manda) ராஜா பகதூர் வம்சத்தில் பிறந்திருந்தாலும், தன் வாழ்நாள் முழுவதையும் எளிய மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விவசாயிகளின் நலனுக்காகவே அர்ப்பணித்த மகத்தான தலைவர் அவர். அரசியல் லாபங்களுக்காகக் கொள்கைகளை மாற்றும் தலைவர்களுக்கு மத்தியில், கொள்கைக்காகப் பிரதமர் நாற்காலியையே தூக்கி எறிந்த வி.பி. சிங்கின் தியாகம் இந்திய வரலாற்றில் மிக அரியதொரு முன்னுதாரணமாகும். போர்பர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியவர் 1980-களின் மத்தியில் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தபோதே தன் தனித்துவமான மற்றும் சமரசமற்ற நேர்மையை வெளிப்படுத்தியவர் வி.பி. சிங் . ரிலையன்ஸ் நிறுவனத்தின் திருபாய் அம்பானி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் மீது வரி ஏய்ப்புப் புகார்களின் கீழ் கடுமையான சோதனைகளை நடத்த உத்தரவிட்டார். சிலருக்கு…

Read More

இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் திட்டத்துடன் பாஜக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து,   காங்கிரஸ்   பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்  அளித்துள்ள பேட்டியில்,  “அரசியலமைப்பு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு முறையை முடிவுக்குக் கொண்டு வருவதே பாஜகவின் இறுதி நோக்கம். பிரதமர் நரேந்திர மோடி என்ன சொன்னாலும், இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளிப்படையாகக் கூறியிருப்பதையும், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். தொகுதி மறுவரையறை மூலம் பெண்கள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த பாஜக விரும்புகிறது. பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதில் மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் 2029 பொதுத் தேர்தலில் தற்போதைய மக்களவை இடங்களின் (543) அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மக்களவையில் பாஜகவின் பலத்தை அதிகரிக்க எதிர்க்கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும்…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாலக்கரை பகுதியில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு,  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  ரவிசங்கர்,  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் விமர்சனங்களை முன்வைத்துவிட்டு, முதலமைச்சரின் பதிலுரையை முழுமையாகக் கேட்காமல் வெளியேறியதாக குற்றம்சாட்டினார். “முதல்வர் பேசும்போது முறையாக சபாநாயகரிடம் அனுமதி பெற்ற பிறகே உறுப்பினர்கள் சைகை செய்தனர். ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் இருந்த சிலர் ஒருமையில் மற்றும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதால் தான் சபாநாயகர் அவர்களைக் கண்டித்தார்” என மேலும் தெரிவித்தார். முதல்வரின் பேச்சு விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவரது பேச்சை பலரும் பாராட்டியுள்ளனர். எந்த அடிப்படையில்…

Read More

சமூக வலைத்தளங்களில், குறிப்பாக யூடியூபில் உணவகங்கள் குறித்து ‘ஃபுட் ரிவ்யூ’ (Food Review) செய்யும்  கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல யூடியூபர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு (Paid Promotions), உணவின் தரம் மற்றும் கடையின் சுகாதாரம் குறித்து ஆராயாமல், வெறும் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே ரிவ்யூக்களை வெளியிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனை முறைப்படுத்த நுகர்வோரின் ஆரோக்கியத்தை முன்னிறுத்திச் சில முக்கிய விதிகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறையின் புதிய முக்கிய விதிகள்: FSSAI கட்டாயம்: யூடியூபர்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முறையான உரிமம் அல்லது பதிவு பெற்ற உணவகங்களில் மட்டுமே இனி ஃபுட் ரிவ்யூ செய்ய வேண்டும். அலங்காரத்திற்கு தடா: கடையின் வெளித்தோற்றத்தையும், உள் அலங்காரத்தையும் (Interior & Exterior) மட்டுமே கவர்ச்சியாகக் காட்டி இனி…

Read More

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. மும்பையில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை,  13 நாட்கள் தாமதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை  தொடங்கியது. இந்தத் தாமதமான வருகை 1951-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக மோசமான தாமதங்களில் ஒன்றாகும். கடுமையான வெயில் மற்றும் உஷ்ணத்திலிருந்து இந்த மழை மக்களுக்குப் பெரும் நிவாரணத்தைத் தந்தாலும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெய்த அதிதீவிர மழை ஒட்டுமொத்த மும்பை மாநகரையும் வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. பத்தாண்டுகளில் இல்லாத பெருமழை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மும்பை நகரின் பல பகுதிகளில் 300 மி.மீ-க்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகப் பிரஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக, தெற்கு மும்பையில் மட்டும் 248 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் ஜூன்…

Read More

கடந்த சில தசாப்தங்களாகவே உலக நாடுகள் சந்தித்து வரும் பருவநிலை மாற்றம் (Climate Change) என்பது மனிதர்களை நேரடியாக வதைக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. மெக்சிகோ, கென்யா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் ஒருபுறம் தவிக்க, மறுபுறம் இந்திய மாநிலங்களும் இதுவரை கண்டிராத வெப்பத்தின் பிடியில் சிக்கித் திணறி வருகின்றன. கொளுத்தும் வட இந்தியாவும், சென்னையில் அதிகரித்த வெப்பமும் உலகளாவிய வெப்ப அழுத்தத்தின் அச்சுறுத்தல் நமக்கு மிக அருகிலேயே, நம் இந்திய மாநிலங்களிலேயே மிகத் தீவிரமாகக் கால்பதித்துள்ளது. சமீப காலமாக வட இந்திய மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை வெயில் கொடுமையின் உச்சத்தை எதிர்கொண்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்கா நகரில் வெயில் 48.2°C-ஐத் தொட்டு உலகிலேயே மிக வெப்பமான இடமாக மாறியது. அது மட்டுமன்றி, உலகின் மிக வெப்பமான 50 நகரங்களின் பட்டியலில் 26 நகரங்கள் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே பதிவாகிப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.…

Read More

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு எப்போது  முதல்  விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி  வெளியிட்டுள்ள அறிவிப்பில், “துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப் பதிவு மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர் ஆகிய பதவிகளில் 26 காலியிங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 30-ம் தேதி தொடங்கி ஜூலை 29-ம் தேதி முடிவடையும். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6-ம் தேதி அன்று நடைபெறும். குரூப்-1 தேர்வை பட்டதாரிகள் எழுத தகுதியுடையவர் ஆவர். வயது வரம்பு பொதுப்பிரிினருக்கு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு (பொதுப்பிரிவு அனைத்து பிரிவினர்) வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு உண்டு. தேர்வு முறை,…

Read More

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மோடி, அமித்ஷா ஆகியோர் தங்கள் சொந்தக்காரர்களைக் கூட ஆளுநர்களாக நியமிக்கலாம்” என பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீங்கள் தெரிவித்துள்ள கருத்து கடும் கண்டனத்திற்குரியது. பாரத மக்களையே தனது குடும்பமாக எண்ணி, பல பத்தாண்டுகளாக மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து வாழும்  பிரதமர் மோடி மற்றும்   மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் மாண்பைக் குறைக்கும் வகையில் நீங்கள் வைத்துள்ள பொறுப்பற்ற விமர்சனங்கள், உங்கள் அரசியல் அறிவின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தங்கள் ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பெருகி வரும் பாலியல் குற்றங்கள், வன்முறைகள், சொந்தக் கட்சியினரின் அட்ராசிட்டிகள் உள்ளிட்டவைகளை மறைத்து மக்களை மடை மாற்றுவதற்கு, வெறுப்பரசியலைக் கையிலெடுக்கும் உங்களுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. எனவே, அரசியலிலும், கல்வியிலும், மக்கள் சேவையிலும் அனுபவம் வாய்ந்தவர்களை…

Read More

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி முன்வைத்த குற்றச்சாட்டுகளும், அதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த பதிலடியும்  ஆளும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே ஒரு கடுமையான வார்த்தை போராக மாறியுள்ளது. குறிப்பாக “திரைப்படப் பாணியில் பேசுகிறார் முதலமைச்சர் விஜய்” என்று  உதயநிதி முன்வைத்த விமர்சனத்திற்கு தவெக தரப்பில் மிகக் காரசாரமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “சினிமா பாணியில் பேசினார் என்ற ஒரு டொக்கு விழுந்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் உருட்டுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். ‘முதல்வர் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து பேசுகிறார்’ என்று பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் ஃபைலை வைத்துக்கொண்டு சபையில் பேசியவர் சொல்கிறார். அதைவிட காமெடி என்னவென்றால், ஸ்க்ரிப்ட் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ப்ரஸ் மீட் கொடுத்ததுதான் ஒரு கல் ஒரு கண்ணாடி…

Read More

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசினார் முதலமைச்சர் விஜய். அப்போது அவர், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததை கிண்டலடிக்கும் விதமான செய்கை ஒன்றை நடித்துக் காண்பித்தார். மேலும் குட்டிக்கதை ஒன்றையும் கூறியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் விஜய்யை கடுமையாக சாடினார். ”ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதலமைச்சர் விஜய் ஒரு முதலமைச்சர் பொறுப்பிற்கான தகுதியுடன் நடந்து கொள்ளவில்லை.  முதலமைச்சர் தேர்தல் mode இல் இருந்து இன்னும் CM Mode-க்கு மாறாமல் இருக்கிறார். சட்டமன்றத்தை ஷூட்டிங் போல நினைக்கிறார்… பெண்கள் மீதான வன்முறை, சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் ஆகியவை குறித்து இதுவரை திமுக போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. ஆனால் பொது மக்கள் போராடி வருகிறார்கள்.…

Read More