Author: Editor web3
தமிழக அரசின் கடன் சுமை குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட கருத்து, திமுக கூட்டணியிலும் தமிழக காங்கிரஸிற்குள்ளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் புள்ளிவிவரங்களுடன் பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்து காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும், அவர் பாஜகவின் குரலாக பேசுவதாகவும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடுகள், சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துதல் ஆகிய துறைகளில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுகிறது.மனித வள மேம்பாட்டுக் குறியீடு உள்ளிட்ட பல கூறுகளில் உத்தரப் பிரதேசம் பின்தங்கி உள்ளது. அனைவருக்குமான வளர்ச்சியை முன்னிறுத்தி சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதற்குப் பதிலாக “புல்டோசர் ஆட்சி”…
வெறுப்பு ஓரே இரவில் ஏற்படாது என்று திரிபுரா மாணவர் மரணம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார். திரிபுராவைச் சேர்ந்த 2 சகோதரர்கள் மீது டேராடூனில் நடத்தப்பட்ட இனவெறி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு தழுவிய சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது: இந்த சம்பவம் ஒரு வெறுப்புக் குற்றம். பாஜகவின் வெறுப்புணர்வை வளர்க்கும் தலைமையால் இத்தகைய வன்முறை சாதாரணமாக்கப்பட்ட நீண்டகால சூழலின் விளைவு இது. டேராடூனில் ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேலுக்கு நடந்தது ஒரு கொடூரமான வெறுப்பு குற்றம். வெறுப்பு ஒரே இரவில் உருவாகாது. பல ஆண்டுகளாக, நச்சுத்தன்மை வாய்ந்த உள்ளடக்கம் மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகள் மூலம் அது தினமும், குறிப்பாக நமது இளைஞர்களிடையே தூண்டப்பட்டு வருகிறது. ஆளும் பாஜகவின் வெறுப்புணர்வை பரப்பும் தலைமை அதை இயல்பாக்கியுள்ளது. மேலும், இந்தியா மரியாதை…
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி இணையவழி மோசடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போலி கடன் விளம்பரங்கள் மூலம் மக்களிடமிருந்து செயலாக்கக் கட்டணங்களும் தனிப்பட்ட தகவல்களும் பறிக்கப்படுகின்றன. மாநில காவல்துறை கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டு, பணம் பறிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடி எப்படி நடக்கிறது? மேற்கு வங்க காவல்துறை தகவலின்படி, சில இணையக் குற்றவாளிகள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் போலியான விளம்பரங்களையும் காணொளிகளையும் பரப்பி வருகின்றனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி வெளியிடப்படும் இந்த விளம்பரங்கள், “உடனடிக் கடன்,” “சிபில் இல்லாமல் கடன்,” “அரசு அங்கீகாரம் பெற்ற கடன் திட்டங்கள்,” மற்றும் “சரிபார்ப்பு இல்லாமல் கடன்” போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிக்கின்றன. மக்கள் நம்பும்படி ஏமாற்றப்பட்டு, போலியான செயலிகள், இணையதளங்கள் அல்லது…
சில்லறை பசங்களை வைத்து அன்புமணி தன்னை அவமானப்படுத்திவிட்டார் என கூறி ராமதாஸ் கண்ணீர் சிந்தியுள்ளார். சேலத்தில் பாமக சார்பில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பாமகவின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவை ராமதாஸ் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கியதையும் அங்கீகரித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கம்செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ஒருநாள் கனவில் தனது தாயார் வந்ததாக கூறினார். அப்போது பிள்ளையை சரியாக வளர்க்காததால் நீ இப்படி கண்ணீர் சிந்துகிறார் என சொன்னதாக கூறினார். மேலும் மருத்துவமனைக்கு சென்றால் கூட ஏன் அன்புமணி…
அதிமுக களத்தில் இல்லை என பேசிய விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஏளனமாக பார்த்த அவர், “தவெகவுக்கு கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது. பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும். நடிகருக்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது” என்று கூறி ரசிகர் கூட்டத்தை மட்டும் வைத்து அரசியல் வெற்றி பெற முடியாது என்று சுட்டிக்காட்டினார்.“அதிமுக களத்திலேயே இல்லை எனச் சொல்ல எவ்வளவு தைரியம்? நாவடக்கம் தேவை” என்று விஜய்யின் கருத்துக்கு கடும் பதிலடி கொடுத்த செல்லூர் ராஜூ, “நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார். விஜய்யின் ரசிகர் பலத்தை…
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, முந்தைய அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுக்கப்பட்டது. அப்போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. இருப்பினும், இந்தாண்டுக்கான பொங்கல் பரிசுக்காக மக்கள் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அத்துடன் ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் எவ்வளவு தொகை என்று ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இந்தநிலையில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
உன்னாவ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கு உச்ச நீதிமன்றம் பெரும் அடியைக் கொடுத்துள்ளது. செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. செங்காரும் ஏற்கனவே வேறொரு வழக்கில் சிறையில் உள்ளார் என்றும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இனி எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது . சிபிஐயின் மேல்முறையீடு தொடர்பாக குல்தீப் செங்காருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எதிர்த்தரப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்ததுடன், அடுத்த விசாரணை வரை செங்காரை எந்த சூழ்நிலையிலும் சிறையில் இருந்து விடுவிக்க முடியாது என்று தெளிவாகக் கூறியது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் ஹேமந்த்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர். 12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடி களில் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியில் இருந்தும் 15 பேர் என மொத்தம் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர். மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். அங்கு, முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. https://x.com/mkstalin/status/2005513844006027640? இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் திமுக மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு! மாலை…
தந்தை – மகன் மோதலுக்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில் சேலத்தில் இன்று (டிச.29) பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். தந்தை – மகன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் செயல் தலைவராக காந்திமதி, கௌரவ தலைவராக ஜி.கே.மணி, பொதுச்செயலாளராக முரளி…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான முக்கியமான சந்திப்புக்குப் பிறகு, ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக புதிய நம்பிக்கைகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு நடந்தது, இது உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கையை எழுப்பியது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிக அருகில் இருப்பதாக இரு தலைவர்கள் கூறியுள்ளனர், இருப்பினும் சில சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ‘போர் முடிவுக்கு மிக அருகில் உள்ளது’: சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் சந்திப்பு ‘மிகவும் சிறப்பாக’ இருந்ததாகக் கூறினார். சந்திப்பின் போது பல முக்கியப் பிரச்சினைகள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டதாக அவர் விளக்கினார். ரஷ்யா-உக்ரைன் போர் இப்போது முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது, ஒருவேளை முன்னெப்போதையும் விட மிக அருகில் உள்ளது என்று தாம் நம்புவதாக டிரம்ப்…