Author: Editor web3
பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களைக் கைது செய்ய முயன்றபோது, காவல் துறை வாகனச் சக்கரத்தில் தலையை வைத்தும், சாலையில் படுத்து உருண்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், துப்புரவுப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கூடாது என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ரிப்பன் மாளிகை முன்பு 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில், இன்று காலை நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் நோக்கி வந்தனர். அறிவாலயத்தின் முன்புறம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில்,…
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கட்கிழமை (நேற்று) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சென்றார். காசா போர் நிறுத்தத் திட்டத்தின் சிக்கலான இரண்டாம் கட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. அந்த சந்திப்பின் போது, டொனால்ட் டிரம்ப், போர்க்கால சூழலில் நாட்டை வழிநடத்தி சிறப்பான செயல்பாட்டைக் காட்டிய பிரதமர் என பெஞ்சமின் நெதன்யாகுவை வெளிப்படையாகக் கௌரவித்தார். பெஞ்சமின் நெதன்யாகுவைப் புகழ்ந்து பேசிய டிரம்ப், “அவர் மிகவும் ஆபத்தான மற்றும் வேதனையான ஒரு காலகட்டத்தில் இஸ்ரேலை வழிநடத்தினார். அந்தக் காலகட்டத்தில் தவறான பிரதமர் பதவியில் இருந்திருந்தால், இன்று இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது” என்று கூறினார். நெதன்யாகு, டிரம்ப்பின் அருகில் நின்று புன்னகைத்துத் தலையசைத்துக் கொண்டிருந்தார். காசா போர் நிறுத்தத் திட்டம் இரண்டாம் கட்டத்துக்கு செல்ல வேண்டுமானால், ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தெளிவாகக் கூறினார். இதை அமைதி செயல்முறைக்கு அத்தியாவசியமான ஒன்றாகவும்…
வரும் பிப்ரவரி 26ம் தேதி நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகா மந்தனாவும் எப்போதும் தங்கள் உறவை மறைத்து வைத்திருந்தாலும், அவர்கள் அடிக்கடி ஒருவரையொருவர் நல்ல நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட விழாவில் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவராத சூழலில் அவர்களின் திருமணம் வரும் பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராஜஸ்தானின் உதய்பூரில்…
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அரிய மற்றும் தனித்துவமான பொருள் ஏலத்திற்கு வரவிருக்கிறது. புகழ்பெற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சர் டான் பிராட்மேனின் ‘பேக்கி கிரீன்’ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொப்பி, அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. இந்த ஏலம் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஏல நிறுவனமான லாய்ட்ஸ் ஆக்ஷன்ஸ் மூலம் நடத்தப்படவுள்ளது. ஏலத்தொகை வெறும் 1 டாலரில் தொடங்குகிறது. இந்த ஏலம் ஜனவரி 26ம் தேதி முடிவடையும். டான் பிராட்மேன் இந்த டெஸ்ட் தொப்பியை சக டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கு பரிசளித்தார். அதன் பின்னர், கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தில் இருந்த இந்தத் தொப்பி, முதல் முறையாக பொது ஏலத்திற்கு வருகிறது. அதனால்தான் இது கிரிக்கெட் வரலாற்றில் மிக மதிப்புமிக்கதும், உணர்ச்சிப்பூர்வமானதுமான பாரம்பரிய நினைவுப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லாய்ட்ஸ் ஆக்ஷன்ஸ் நிறுவனத்தின் லீ ஹேம்ஸ் கூறுகையில், “இது சர் டான் பிராட்மேன் அவர்களால் நேரடியாக வழங்கப்பட்ட, உண்மையானதும் விலைமதிப்பற்றதுமான…
என்னை பொறுத்தவரை அதிமுகவும், பாஜகவும் அடிமை கட்சிகள்தான் ஆனால் யாருக்கு அடிமை?. மக்களுக்கு அடிமை என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, எப்போது பார்த்தாலும் அதிமுக அடிமை கட்சி என்றும் பாஜகவைப் பொறுத்தவரை சங்கி கட்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இருவருமே டெல்லிக்கு அடிமையாக இருப்பதற்காக கூட்டணியை உருவாக்கி இருக்காங்க என்று சொல்கிறார். இதனை தற்குறி உதயநிதி பேசியிருந்தால் மன்னித்து விட்டிருக்கலாம். ஆனால் தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் இப்படி பேசியிருப்பதால், அவருக்கு பதில் சொல்லாமல் இருந்தால் நல்லா இருக்காது. திமுக ஆட்சியில் இருந்ததை விட அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் அதிமுகவும் அதன் தலைவர்களும். ஆமாம்.. என்னைப் பொறுத்தவரை அதிமுக அடிமை கட்சி தான்.. ஆனால் யாருக்கு அடிமை என்றால் மக்களுக்கு அடிமை. மக்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்கு சேவை செய்கின்ற அடிமை கட்சி. பாஜகவும் அடிமை கட்சி…
பயிற்சியாளர் கம்பீர் நீக்கம் குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கமளித்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தொடர்பான அனைத்து ஊகங்களையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முற்றிலுமாக நிராகரித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான முடிவுகளைத் தொடர்ந்து கவுதம் கம்பீருக்கு மாற்றாக மற்றொருவரை வாரியம் தேடுவதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தப் பதவிக்கு VVS லட்சுமண் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இப்போது, உயர்மட்ட BCCI அதிகாரிகள் இந்த அறிக்கைகளை முற்றிலும் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளனர். கௌதம் கம்பீரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஊடகங்களில் பரவி வரும் ஊகங்களில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் கூறினார். சுக்லாவின் கூற்றுப்படி, வாரியம் கம்பீருக்கு முழுமையாக ஆதரவளிக்கிறது என்றும், இந்த நேரத்தில் பயிற்சி அமைப்பில்…
நான்காம் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் இன்று (டிச. 30) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்றிரவு மதுரை வந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் இங்கு வந்துள்ளேன். இந்திய அரசு, கல்வித் துறை, கடந்த நான்கு ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது… இது நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான ஒரு சிறந்த திட்டமாகும்…” என்று அவர் கூறினார். தமிழ் மொழியை நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். வட இந்தியாவிலிருந்து பல மாணவர்கள் தமிழ் கற்க இங்கு வந்துள்ளனர், மேலும் பல தமிழ் ஆசிரியர்கள் நாட்டின் வடக்குப் பகுதியில் தமிழ் கற்பிக்க வட இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். இது தேசிய ஒருமைப்பாட்டின் சிறந்த சின்னமாகும்.…
சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் (டிச. 27) வரலாறு காணாத வகையில் ரூ.1,04,800க்கு விற்பனையானது. அதன்படி, நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 20-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.281-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்து, ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் விற்பனையனது. இந்த நிலையில், சென்னையில் தங்கம், வெள்ளி விலை இன்று 2-வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு…
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் நேற்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். வரது மரணத்தை வங்கதேச தேசியவாத கட்சி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. கலிதா ஜியா மறைவால் அவரது கட்சித் தொண்டர்களும், மக்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். கலிதா ஜியா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. மேலும், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி கடந்த 28ம் தேதி திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 80 ரன்களிலும், ஷபாலி வர்மா 79 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் 40 ரன்களுடனும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்…