Author: Editor web3
இந்திய துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் முகவரியை மாற்றியமைத்த மாபெரும் சாம்பியனும், திறமையான பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா தனது 49வது காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை முடித்துவிட்டு திரும்பிய அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு, ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. வீரராகவும், பயிற்சியாளராகவும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ஜஸ்பால் ராணாவின் வாழ்நாள் சாதனைகளையும் அவர் படைத்த வரலாற்றுச் சாதனைகளையும் தெரிந்துகொள்வோம். ஜஸ்பால் ராணா தனது 12-ஆவது வயதிலேயே தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். 1988-இல் அகமதாபாத்தில் நடைபெற்ற 31-ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்திய துப்பாக்கிச் சுடுதல் துறையில் தனது முதல் முத்திரையைப் பதித்தார். சர்வதேச அரங்கில், குறிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தியாக ராணா திகழ்ந்தார். 1994 முதல் 2006 வரை நடைபெற்ற…
ஜூன் 12, 2025… இந்தியாவே உறைந்துபோன அந்த கருப்பு நாள்! அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையம் நோக்கி, 242 பயணிகளுடன் கம்பீரமாகப் புறப்பட்டது ஏர் இந்தியாவின் AI171 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். ஆனால், புறப்பட்ட அடுத்த 32-ஆவது விநாடி… யாரும் எதிர்பாராத அந்தப் பேராபத்து நிகழ்ந்தது. வானில் பறக்க வேண்டிய விமானம், தரைமட்டமாகிக் கிடந்தது. விமானத்தில் இருந்த 241 பேர், தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 உயிர்கள் நொடிப்பொழுதில் காற்றில் கரைந்து போயின. இன்றுடன் இந்தத் துயரம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்ட நிலையிலும்… “அன்று அங்கு என்ன நடந்தது?” என்ற கேள்விக்கான விடை மட்டும் இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. விபத்து குறித்துப் புலனாய்வு செய்த இந்தியாவின் ‘விமான விபத்து விசாரணைப் பிரிவு’ (AAIB), கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது. அதில் அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் வெளியாகின.…
பிரபல இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரரும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர் மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49) இன்று அதிகாலை டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்தத் தகவலை இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் (NRAI) தலைவர் கலிகேஷ் நாராயண் சிங் தியோ உறுதிப்படுத்தியுள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக் கோப்பை தொடரை முடித்துவிட்டு இந்திய அணியினருடன் தாயகம் திரும்பியபோது, ஜஸ்பால் ராணாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், அவர் உடனடியாக சாகேட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு ‘ஸ்டென்ட்’ வைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. இதுகுறித்து மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துப்பாக்கிச் சுடுதல் வீரரும், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கரின்…
சென்னையில் கடந்த சில நாட்களாகக் கணிசமாகக் குறைந்து வந்த தங்கம் விலை, இன்று (ஜூன் 12) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஜூன் 11 நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.13,500-க்கும், சவரனுக்கு ரூ.2,400 வரை சரிந்து ரூ.1,08,000-க்கும் விற்பனையானது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.5,600 வரை சரிந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் அந்த வீழ்ச்சியை ஈடுசெய்யும் வகையில் விலை பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.13,800-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ரூ.1,10,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது. உலகளாவிய பொருளாதாரக் காரணிகளால் தங்கம் விலை ஒரே…
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் அதிகரித்துள்ள மோதல் மற்றும் தாக்குதல்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஓமனின் ஷினாஸ் (Shinas) துறைமுகம் அருகே 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற வணிகக் கப்பல் ஒன்று இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். தாக்குதலுக்குள்ளான அந்தக் கப்பல் ‘எம்.டி ஜல்வீர்’ (MT Jalveer) என அடையாளம் காணப்பட்டுள்ளது. கினியா (Guinea) நாட்டின் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பல், ஒரு ‘அஸ்பால்ட்/பிடுமன்’ (Asphalt/Bitumen) டேங்கர் ரகக் கப்பலாகும். ‘மரைன் டிராஃபிக்’ (MarineTraffic) இணையதளத் தகவல்படி, இந்தக் கப்பல் 119.95 மீட்டர் நீளமும், 16.84 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் 20 இந்திய மாலுமிகள் பணியாற்றி வந்தனர். கப்பலில் இருந்து கரும்புகை வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்தச்…
இன்னும் சில மணிநேரங்களில் தொடங்கும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, பல வரலாற்று சாதனைகளுக்குக் களம் அமைக்கப் போகிறது. ஆனால், இந்த முறை அரங்கேறப்போகும் ஒரு சுவாரசியம்… ரசிகர்களின் நெஞ்சங்களை நெகிழ வைக்கப் போகிறது; நெஞ்சை உலுக்கவும் போகிறது. ஆம்! ஒரே தாயின் வயிற்றில் பிறந்து, ஒரே முற்றத்தில் ஓடி விளையாடிய 7 ஜோடி சகோதரர்கள், இந்த உலகக் கோப்பைக் களத்தில் கால் பதிக்கிறார்கள். 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத ஒரு புதிய எமோஷனல் அத்தியாயத்தை எழுதப்போகிறது. ஆம்! இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 7 ஜோடி சகோதரர்கள் களம் காண்கிறார்கள். இதில் 4 ஜோடிகள் எதிரெதிர் நாடுகளுக்காகவும், 3 ஜோடிகள் ஒரே நாட்டுக்காகவும் களம் இறங்குகிறார்கள். “விதியின் விசித்திர விளையாட்டு இது! பாசக் கயிற்றால் பிணைக்கப்பட்ட அண்ணன்-தம்பிகள், நாடென்று வரும்போது எதிரெதிர் துருவங்களாக களத்தில் மோத காத்திருக்கிறார்கள். அந்தவகையில், முதலாவதாக, வில்லியம்ஸ் சகோதரர்கள் வெவ்வேறு…
மே மாதத்திற்கான ஊதியம் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. வருகைப் பதிவேடு செயலி குளறுபடியைக் காரணம் காட்டி, பணியாளர்களின் சம்பளத்தில் பெருமளவில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ.18,000 சம்பளம் வாங்கும் செவிலியர்களுக்கு இந்த மாதம் வெறும் ரூ.3,000 மட்டுமே கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த திமுக ஆட்சிக் காலம் வரை தங்களுக்குச் சம்பளம் முறையாக வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போதைய தவெக ஆட்சித் தொடக்கத்திலேயே இந்தச் செயலிப் பிரச்சனையால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாகவே சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுகாதார நிலைய ஊழியர்களுக்குச் சம்பளக் குளறுபடிகள் நீடித்து வருகின்றன.…
மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்குத் திரை உலகினரும், பொதுமக்களும் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியில் அமைந்துள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே ஏராளமான திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் வடிவேலு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் அஞ்சலி செலுத்த பண்ணை வீட்டிற்கு வருகை தந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலைப் பார்த்த நடிகர் வடிவேலு, திரையுலகில் தனக்கு வாழ்வளித்த மாபெரும் இயக்குநரின் இழப்பைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினார். கவிஞர் வைரமுத்துவும் பாரதிராஜாவின் உடலுக்குத் தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.
இளம் பருவத்தினரின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் அதிரடிச் சட்டத்தைக் கனடா அரசு கொண்டு வந்துள்ளது. உலகளவில் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கனடா இம்முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் 16 வயதிற்குட்பட்டவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளை வைத்திருக்கத் தடை விதித்துள்ளன. இதேபோன்று பிரான்ஸ், டென்மார்க் மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள கனடா அரசு, ‘டிஜிட்டல் பாதுகாப்பு சட்டம்’ (Digital Safety Act) என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் யாரும் சமூக ஊடகங்களில் கணக்குகள் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. குறிப்பாக, சிறார்களின் அனுமதியின்றி எடுக்கப்படும் அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் இணையத்தில்…
கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருந்த சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம், வரும் ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாதந்தோறும் நடைபெறும் இக்கூட்டம், கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது நடைபெற்றது. அதன் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் தவெக வெற்றி பெற்று, ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அரசு அமைந்த பின்னரும், கடந்த மே மாதத்தில் மாமன்றக் கூட்டம் நடத்தப்படவில்லை. சென்னையிலுள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 14-ஐ தவெக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய ஆட்சி அமைந்த பிறகும் சென்னை மேயர், துணை மேயர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மரியாதை நிமித்தமாகச் சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. மேலும், புதிய அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தினால்தான் மாமன்றக் கூட்டம் தள்ளிப்போகிறது என்ற பேச்சுகளும் உலா வந்தன. இத்தகைய அரசியல் சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும்…