Close Menu
    What's Hot

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»வீட்டில் தூக்கிட்டு மலையாள நடிகர் தற்கொலை… கேரள திரையுலகம் அதிர்ச்சி
    சினிமா

    வீட்டில் தூக்கிட்டு மலையாள நடிகர் தற்கொலை… கேரள திரையுலகம் அதிர்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    actor
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிறந்த நடிப்பிற்காக கேரள அரசின் விருது வென்ற மலையாள நடிகர் அகில் விஸ்வநாதன் (30), வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘சோழா’ என்கிற படத்தில் நாயகனாக நடித்திருந்தார் அகில். அதே படத்தில் பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் வில்லனாக நடிக்க, நாயகி நிமிஷா சஜயனை காதலிக்கும் நாயகனாக அகில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘சோழா’ படத்தில் அகிலின் நடிப்பும் பாராட்டப்பட்டது.

    தொடர்ந்து ‘ஆபரேஷன் ஜாவா’ உள்பட சில படங்களில் நடித்திருந்தார். தற்போது ‘OTT’ என்கிற படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில் தான் அகில் விஸ்வநாதன் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு தினங்கள் முன்பு இந்த சோக சம்பவம் நடந்திருக்கிறது. திருச்சூரில் உள்ள மத்தத்தூரில் வசித்து வந்த அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்கப்பட்டது மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் தான் அகிலின் தந்தை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த துயரத்துக்கு மத்தியில் அகிலின் தற்கொலை செய்தி வெளிவந்துள்ளது. குழந்தையாக இருந்தபோதே தனது சகோதரருடன் இணைந்து நடித்த ‘மங்காண்டி’ என்ற தொலைக்காட்சி தொடருக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருதை வென்றவர் அகில். நடிப்பில் ஆர்வம் மிகுந்த இவர் இளைஞராக ஒரு மொபைல் போன் கடையில் பணிபுரிந்தபோது அவருக்கு ‘சோழா’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

    ‘சோழா’ படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றாலும் அகிலுக்கு போதிய வரவேற்பை கொடுக்கவில்லை. வறுமைக்கு மத்தியில் சினிமா கனவை துரத்தி வந்த நிலையில் அவர் தற்கொலை செய்தி வந்துள்ளதாக ‘சோழா’ பட இயக்குநர் சனல் குமார் சசிதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சனல் குமார் சசிதரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சினிமாவில் நடிக்க வறுமையை எதிர்த்துப் போராடினார். ‘சோழா’ படத்தில் அவரது நடிப்பு அவருக்கு நிறைய வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அகில் தற்கொலை செய்து கொள்வார் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர் இறப்பு செய்தியை கேட்டு மனம் உடைந்து போனேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிட்னி தீவிரவாத தாக்குதல்!. பிரதமர் மோடி இரங்கல்!. பயங்கரவாதத்திற்கு எதிராக கண்டனம்!.
    Next Article பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டாக சதி செய்கின்றன!. சட்டத்தையே மாற்றிவிட்டார் மோடி!. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!.
    Editor TN Talks

    Related Posts

    ரூ.900 கோடி வசூல்… தொடர்ந்து பட்டையை கிளப்பும் துரந்தர்

    December 23, 2025

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    December 23, 2025

    “பராசக்தி” ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.