Close Menu
    What's Hot

    AI மிகவும் ஆபத்தானது..! தந்தையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்..!

    கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

    சேலம்; திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிப் படுகொலை – நிலப்பிரச்சனை காரணமா? காவல்துறை விசாரணை தீவிரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூருக்கு முதலமைச்சர் செல்ல தடையில்லை; திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
    Featured

    கரூருக்கு முதலமைச்சர் செல்ல தடையில்லை; திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் விஜய், கரூருக்கு செல்ல தடையில்லை எனக் கூறி திமுக தொடுத்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் கருத்து தெரிவிப்பதைத் தடுக்கக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் மற்றும் ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான  திமுக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார்,  கரூர் விவகாரம் விரிவான தீர்ப்பு ஏற்கனவே உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட கதைக்களத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். இழப்பீடு வழங்கும் பெயரில், நீதிமன்றம் தடை விதித்திருந்தபோதும் அவர்கள் ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என்றார்.

    அதற்கு நீதிபதி கே.வி. விஸ்வநாதன், முதல்வரின் கருத்துகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து, “பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிராக தடை உத்தரவு கோருகிறீர்களா? நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லலாம். சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் ஒரு வழக்கில், அரசியல் எதிரணியினரின் கருத்துகள் குறித்து உச்சநீதிமன்றம் தொடர்ந்து உத்தரவுகளை எவ்வாறு பிறப்பிக்க முடியும்? என வினா எழுப்பினார்.

    தொடர்ந்து வாதம் நடைபெற்ற நிலையில், மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

    விசாரணையின்போது, இந்த மனுவை தகுதியின் அடிப்படையில்கூட (merits) தள்ளுபடி செய்ய நீதிமன்றம் முனைப்புடன் இருப்பதாக நீதிபதிகள் தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெற்றார்.

    மேலும், தமிழ்நாடு முதல்வர் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதை உச்சநீதிமன்றம் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நிலுவையில் உள்ள ஒரு வழக்கில், அரசியல் எதிரணி தரப்பை இணைத்து, நீதிமன்றத்தை அரசியல் விவாதத்திற்கான மேடையாக மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    Chief Minister Vijay DMK petition dismissed Karur karur visit supreme court
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசீனாவை புரட்டிப்போட்ட கனமழை: வெள்ளம், நிலச்சரிவுகளில் 8 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்..!!
    Next Article ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் தீவிரம்..!! 2 கப்பல்களுக்கு குறி.. ஈரான் ஏவுகணை அட்டாக்..!!
    Editor TN Talks

    Related Posts

    AI மிகவும் ஆபத்தானது..! தந்தையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்..!

    July 7, 2026

    கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

    July 7, 2026

    சேலம்; திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிப் படுகொலை – நிலப்பிரச்சனை காரணமா? காவல்துறை விசாரணை தீவிரம்

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    AI மிகவும் ஆபத்தானது..! தந்தையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்..!

    கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

    சேலம்; திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிப் படுகொலை – நிலப்பிரச்சனை காரணமா? காவல்துறை விசாரணை தீவிரம்

    உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் – EPS நம்பிக்கைப் பேச்சு

    அடடே இப்படியும் மனிதர்களா? – குருவிக்காக ஸ்கூட்டி தியாகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.