Close Menu
    What's Hot

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு!. குற்றவாளிக்கு மரண தண்டனை!
    இந்தியா

    புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு!. குற்றவாளிக்கு மரண தண்டனை!

    Editor web3By Editor web3May 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Puducherry Death Sentence
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2024-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. இந்த வழக்கில் கைதான 19 வயது இளைஞன் கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, புதுச்சேரி போக்சோ நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி கருணாஸுக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். இதே வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் (59) என்பவர் ஏற்கனவே சிறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது முக்கியக் குற்றவாளிக்கு உச்சகட்டத் தண்டனை கிடைத்துள்ளது.

    மரண தண்டனையுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ruu.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பிஞ்சுச் சிறுமியின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் புதுச்சேரி மக்கள், இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான கொடூரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக அமையும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தீர்ப்பு குறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், “எங்கள் மகளை இழந்த துயரம் ஆறாதது என்றாலும், குற்றவாளிக்குக் கிடைத்துள்ள இந்த மரண தண்டனை நீதியின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது” எனக் கண்ணீருடன் தெரிவித்தனர். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தகைய கடுமையான தீர்ப்புகள் அவசியம் என்பதை இந்த வழக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரும்பான்மை: ஆளுநருக்கு ப.சிதம்பரம் கண்டிப்பு!
    Next Article காங்கிரஸுடனான உறவு முறிவு!. மக்களவையில் இடமாற்றம் கோரி கனிமொழி கடிதம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026

    கேரளம் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு!. காங்கிரஸ் தலைமை அதிரடி!

    May 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    சர்வதேச குடும்ப தினம்  – குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் வாழ்த்து

    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.