Close Menu
    What's Hot

    ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்த ’நீட்’ வினாத்தாள்கள்… வங்கியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு! 

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»பாதாள சாக்கடைகளை மனிதர்களே அள்ளுவதா? – செல்வப்பெருந்தகை
    அரசியல்

    பாதாள சாக்கடைகளை மனிதர்களே அள்ளுவதா? – செல்வப்பெருந்தகை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    24 66309f52e6af7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்வது சட்டவிரோதமும் மனிதாபிமானமற்ற செயலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்வது சட்டவிரோதமும் மனிதாபிமானமற்ற செயலாகும். இதற்கு தடை விதிக்கும் சட்டம் (2013) இருந்தபோதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையில் இறங்கிய ரவி (30), பிரபு (32) என்ற இரண்டு இளைஞர்கள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

    இந்தக் கொடூரமான மரணத்திற்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றத் தவறியவர்கள் முழுப்பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இப்பணிகளை மேற்கொண்டவர்கள் உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

    கடந்த 2023 ஆண்டு மேமாதம், கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் இனி வருங்காலங்களில், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி, அதன் வாயிலாக. இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    எனவே, இனிவரும்காலங்களில் ஒருவரும் சாக்கடைக்குள் இறங்கி உயிரிழக்காத வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தும் நடைமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை மீறுபவர்களுக்கு கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வலியுறுத்துகிறேன்.

    congress selvaperunthagai செல்வப்பெருந்தகை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்படும் – லஞ்ச ஒழிப்புத்துறை
    Next Article உலக புகழ்பெற்ற தசரா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    Editor TN Talks

    Related Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    June 17, 2026

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    June 17, 2026

    முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்த ’நீட்’ வினாத்தாள்கள்… வங்கியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு! 

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.