மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் இன்று (2.5.2026), சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,
12ஆம் வகுப்பு முடித்து 2026-2027ஆம் ஆண்டு கல்லூரிகளில் முதலாமாண்டு சேரவிருக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில், தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் “TSC-HELP DESK“உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா,எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா – கழக மாணவர் அணிச் செயலாளர் திருமதி வீரமணி, துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், வி.ஜி.கோகுல் – மாவட்ட அமைப்பாளர்கள் சென்னை தென்மேற்கு விஜய், சரவணன், சத்யா மற்றும் 50க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.
