Author: Editor web4
23-வது ஃபிஃபா உலகக் கோப்பை தொடரானது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், 12 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், 3வது இடத்தில் இருக்கும் சிறந்த 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 32 அணிகள் நாக் – அவுட் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில், நேற்று இந்திய நேரப்படி 10.30 மணிகு நடைபெற்ற ’கே’ பிரிவு லீக் ஆட்டத்தில் ரொனால்டோ தலைமைஇயிலான போர்ச்சுக்கல் அணியும், டி.ஆர் காங்கோ அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 52 ஆண்டுகளுக்கு பிறகு காங்கோ அணி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் கோல் அடித்து வரலாற்று சாதனையை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் காங்கோ அணியில் இடம்பெற்ற சாமுவேல் முத்துசாமி எனும் தமிழ் மரபு சார்ந்த வீரர் விளையாடி இருந்தார்.…
பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ளது ’சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம். மிஷ்கினும், கீர்த்தி சுரேஷூம் வழக்கறிஞராக நடித்துள்ள இப்படத்தில், பால சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோ தயாரிப்பிலும், சாம்.சி.எஸ் இசையிலும் உருவாகியுள்ள இப்படம், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில், ‘சத்தியவான் சாவித்திரி’ படம் அடுத்த மாதம் 24-ந்தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை 7.5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்துமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு பின்னர் திமுகவிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டதால் அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித சிறப்பு இட ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தையும் மக்கள் ராஜன் சுட்டிக்காட்டினார். மேலும் முதலமைச்சர் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் 2025-2026 கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பொறியியல் கல்லூரி சேர்க்கை சிறப்பு…
வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மின்வாரியத்தின் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக மின்சார வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 31 வரை வழங்கப்பட்ட இடமாற்றம , பதவி உயர்வு , உள்-தேர்வு (internal selection) உத்தரவுகளைப் பெற்ற ஊழியர்கள், உடனடியாக ஜூன் 25க்குள் பழைய பணியிடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய பணிக்கு சேர வேண்டும். ஜூன் 25க்குள் புதிய பணிக்கு சேராத ஊழியர்களின் மாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படும். மின்சார வாரியம் , மின் பகிர்மான கழகம் , பசுமை எரிசக்தி கழகம் உள்ளிட்ட 4 மின் துறை நிறுவனங்களில் பணி மாறுதல் வெளிப்படைதன்மையோடு மேற்கொள்ளும் வண்ணம் ஜூன் 30-ம் தேதிக்குள் காலிப்பணியிடங்கள் குறித்தான விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின்சார வாரியத்தில் அனைத்து வகையான பணி மாறுதலர்களும் ஆன்லைன் மூலமாக வெளிப்படை தன்மையோடு கையாளப்படும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
48 அணிகள் பங்கேற்றுள்ள 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சான்பிரான்சிஸ்கோவில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30மணிக்கு நடைபெற்ற ’ஜெ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா மற்றும் ஜோர்டான் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆக்ரோஷமாக விளையாடிய ஆஸ்திரியா அணியினர், 21-வது நிமிடங்களில் ரோமானோ ஷ்மிட் அடித்த முதல் கோலால் முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிவில் எவ்வளவோ முயன்றும் ஜோர்டான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜோர்டான் அணிக்கு 50-வது நிமிடத்தில் அலி ஓல்வான் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்தார். ஆனால், வீடியோ பரிசோதனைக்கு பிறகு அது ஹேண்ட்பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் கோல் செல்லாமல் போக ஆஸ்திரிய வீரர்கள் ஏமாற்றமடைந்தனர். பின்னர் 76-வது நிமிடத்தில் ஜோர்டான்…
கோட், பட்டு வேட்டி அணிவது செய்திகளா? என் அன்பான வேண்டுகோள் இதுவே..! முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..!
சென்னை வானகரத்தில் நடைபெற்ற திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தம்பதிகளை வாழ்த்திய பிறகு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “ ஆற்றலுக்கும், கொள்கை பிடிப்புக்கும் இலக்கணம் ஆற்காடு வீராசாமி. சிறைச்சாலையில் எனக்கு அறிவுரை வழங்கியவர் ஆற்காடு வீராசாமி, மிசாவில் ஏற்பட்ட தழும்பு இன்றும் என் கையில் உள்ளது” என்றார். “ கோட் அணிவதும், பட்டு ஏட்டி அணிவதும் இன்று செய்திகளாகி கொண்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடியது தான் செய்தியாக வருகிறது. ஆட்சியை பற்றி வரும் செய்திகளை படியுங்கள். படித்து உண்மையை கண்டுபிடிதிது, அதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என்பதே என் அன்பான வேண்டுகோள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக்கழகம்” எனக் கூறினார்.
வேலூரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை தேடி ரயில் மூலம் திருப்பூருக்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தனியாக நின்றிருந்த அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண் தான் வேலை தேடி இங்கு வந்திருப்பதாக கூறினார். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், தான் ஒரு பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதாகவும், நினைத்தால் உடனே வேலை வாங்கித் தர முடியும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் அழைத்துச் சென்றுள்ளார். நள்ளிரவு 1 மணி அளவில், அந்த பெண்ணை திருப்பூர் நல்லூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்கு அந்த வாலிபர் கடத்திச்…
இரண்டாவது நாளாக இன்றும் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து புத்தாக்க பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் அந்த அடிப்படையில் முதல் நாளான நேற்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி புத்தாக பயிற்சி தொடங்கி வைத்தார். நேற்று காலை 10 மணி முதல் ஐந்து முப்பது மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலாளர் மூத்த அதிகாரிகள் சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்நிலையில் இரண்டாம் நாள் இன்று காலை 10 மணி முதல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது இன்று நடைபெறும் பயிற்சியில் நிர்வாக செயல்பாடுகள் சட்டப்பேரவை கேள்வி நேரங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து எல்லாம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.…
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கான்சாஸ் சிட்டியில் இந்திய நேரப்படி 6.30 மணிக்கு ’ஜெ’ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவும், அல்ஜீரியாவும் மோதின. உலகக் கோப்பையில் 6வது முறையாக களமிறங்கி இருகும் மெஸ்ஸியின் ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே தனது கணக்கை தொடங்கினார் மெஸ்ஸி. ஆனால் அது ஆஃப் சைட் காரணமாக செல்லாத கோலாக மாறியது. அதேப் போல், 9வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் அடித்த கோலும் ஆப் சைட் கோலாக மாறியது. தொடர்ந்து 17-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். சமநிலையை எட்ட, அல்ஜீரியா கடுமையாக போராடிய போதிலும், முதல் பாதி முடிவில் அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அர்ஜென்டினா அணிக்காக,…
2022-ம் ஆண்டு ரஷியா மற்றும் உக்ரைன் இடையே தொடங்கிய போரானது, இன்று வரையிலும் நீடித்து வருகிறது. கிட்டத்தட்ட 4 வருடங்களை தாண்டியும் இருநாட்டுக்கும் இடையேயான தாக்குதல்கள் நீண்டுக் கொண்டே செல்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின. ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் பேசினார். எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த…