Author: Editor web4

இந்தியாவில் கடந்தாண்டை விட தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மிக அதிகமாக காணப்பட்ட போதிலும், இந்தியாவின் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் 34 சதவீதம் உயர்ந்து 3.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மறுபுறம், கடந்த 2025 மே மாதத்தில் 566.22 மில்லியன் டாலராக இருந்த வெள்ளியின் இறக்குமதி, இந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 75.57 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 86.65 சதவீத வீழ்ச்சியாகும். தங்கம் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையேயான வித்தியாசம்) 28.21 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பில் தங்கம் மட்டுமே 5 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்களிக்கிறது. இந்தியாவிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் சுவிட்சர்லாந்து 40 சதவீதப் பங்களிப்புடன்…

Read More

திருப்பூரில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்திய 12 அரசு பேருந்துகள், 4 தனியார் பேருந்துகளுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிகப்பட்டது. திருப்பூரில் இயக்கப்படும் தனியார், அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஏழு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் 41 பேருந்துகளை ஆய்வு செய்ததில் 12 அரசு பேருந்துகளும், 4 தனியார் பேருந்துகள் என மொத்தம் 16 பேருந்துகளில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 16 ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து ஒவ்வொரு பேருந்துக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 1‌.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து…

Read More

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், இன்று காலை 3.30 மணிக்கு போஸ்டனில் ‘ஐ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஈராக் மற்றும் நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி ஆரம்பித்த 29வது நிமிடத்தில் நார்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து அணிக்கு 1-0 என்ற முன்னிலையை பெற்றுத்தந்தார். தொடர்ந்து 39வது நிமிடத்தில் ஈராக் அணியின் அய்மன் ஹூசைன் கோல் அடித்து ஆட்டத்தை 1-1என சமநிலைக்கு கொண்டு வந்தார். முதல் பாதி முடிவடைவதற்கு முன்பாக, 43-வது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் தனது இரண்டாவது கோலை பதிவு செய்து நார்வே அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் நார்வே முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியிலும் அதிகாரம் செலுத்திய நார்வே அணி, 76வது நிமிடத்தில் 3-1என்ற கோல் கணக்கில்…

Read More

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பு பருவத்தில் மாம்பழங்களுக்குப் போதிய விலை கிடைக்காததால், விரக்தியடைந்த விவசாயிகள் டன் கணக்கிலான மாங்காய்களை ஆங்காங்கே சாலை ஓரங்களில் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 33 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் மா விளைச்சல் தீவிரமடைந்து, அறுவடைப் பணிகள் நடைபெறும். இந்த ஆண்டும் மா விளைச்சல் நல்ல முறையில் உள்ள நிலையில், சந்தையில் நிலவும் கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், மாங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ. 12 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவை மாங்கூல் தொழிற்சாலை வியாபாரிகள் மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்கள் விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ. 3 மட்டுமே மிகக் குறைந்த விலைக்கு…

Read More

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் சாட்சி விசாரணை வரும் 24 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21 ம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய மோகன்ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கு 819 பக்க குற்றபத்திரிக்கை வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி, சாட்சி விசாரணை வரும் 24 ஆம் தேதி முதல் துவங்க உத்திவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் வரும் 24 ம்…

Read More

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கைதான வடமாநிலத் தொழிலாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அவரை வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வசிக்கும் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். ஆனால் அங்கு தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து முறையான ஆவணங்களோ, பட்டியலோ இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த…

Read More

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்திற்குள் ஆபாசமாக உடை அணிந்து சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு முற்றிலும் தடை விதிப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தசரா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் தசரா குழுக்களுக்கு கோவில் செயல் அலுவலர் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தசரா குழுக்களில் சினிமா கலைஞர்களை கொண்டு, சினிமா பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்திற்குள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆபாச நடனம் ஆடுவதற்கோ அல்லது அநாகரிகமான ஆடைகளை அணிந்து வரும் நடனக் கலைஞர்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைவதற்கோ அனுமதி இல்லை. கடந்த…

Read More

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000வரை பயிர்க்கடன் பெற்ற குறு,சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 25.05.26 அன்று ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுப்படி செய்யும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். மாநிலம் முழுவதிலுமிருந்து இந்த விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க, 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.25ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின் படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின் படியும், தமிழ்நாடு அரசின்…

Read More

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், சினிமாவில் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி விஜய்சேதுபதியாக அசத்தியவர், ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். ஆகையால் அவரது பெயர் மாஸ்டர் மகேந்திரன் என அழைக்கப்படுகிறார். அன்மையில் வெளியான 29 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மகேந்திரன். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. பட புரோமோஷனுக்காக கொடுக்கப்படும் பேட்டிகளின் போது அவர் பேசும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தும். அவ்வாறு சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியின் போது, மின்வெட்டு குறித்து பேசியிருந்தார். சில மாதங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா?”, “தேவைப்பட்டால் என் வீட்டு மின்சாரத்தைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள்” என பேசியிருந்தது பலரது எதிர்ப்பை சம்பாதித்தது. மகேந்திரனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் குறுகிய…

Read More

ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு, கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சென்னை இராயபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.வி.விஜய் தாமு, திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சுபேர் கானை விட 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமுவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சுபேர் கான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதேபோல கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம், திமுக வேட்பாளர் ஆர்.மகேஷை விட, 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தளவாய் சுந்தரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் ஆர்.மகேஷ் தேர்தல் வழக்கு தாக்கல்…

Read More