Author: Editor web4
சென்னை எழும்பூர் நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது சொகுசு கார் ஏற்றி மரணம் ஏற்படுத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் குற்றவாளி என சென்னை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. EMPEE குழுமத்தின் தலைவர் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. இவர் EMPEE நிறுவனத்தின் இயக்குனர் ஆவர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் 22 தேதி சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நள்ளிரவில் மது போதையில் வந்த ஷாஜி தனது சொகுசு காரை ஏற்றி உள்ளார். இதில் 12 வயதான முனிராஜ், இடுப்பு எலும்பு முறிவு மற்றும் வயிறு பகுதியில் ஏற்பட்ட படுங்காயங்களினால் சிகிச்சை பலனின்றி மே 24 அன்று இறந்து விட்டான். இதே போல். வாசு (8), சுப ரஞ்சிதா (7), ராஜா மொகைதீன்,(19) மணி (19) ஆகிய நான்கு பேர்…
பிலிப்பைன்ஸின் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள தால் எரிமலையின் பிரதான எரிமலை வாய்ப் பகுதியில் நேற்று எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. இந்த நீராவி-மக்மா வெடிப்பை பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பினால் எரிமலைவாய்ப் பகுதிக்கு மேலே 1,200 மீட்டர் உயரத்திற்கு கரும் சாம்பல் புகைகள் எழுந்தன. எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பைவோல்க்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கண்காணிக்குமாறும், மற்றும் தயார்நிலை குறித்த உள்ளூர் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பைவோல்க்ஸின் அதிகாரப்பூர்வ தகவலின் படி இந்த தால் எரிமலையில் ஏற்பட்ட பெரும் வெட்டிபு ஏறத்தாழ நானரை நிமிடங்கள் நீடித்தாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் பதிவு செய்த வீடியோ மற்றும் வெப்ப காட்சிப்படங்களை வெளியிட்டனர். எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து உடனடியாக குறிப்பிடத்தக்க நில அதிர்வுகளோ அல்லது நில உருக்குலைவு அதிகரிப்புகளோ பதிவாகவில்லை. தற்போது வரை இந்த எரிமலை மீது எச்சரிக்கை…
ஆழ்துளை கிணற்றில் விலங்குகளும், சிறுவர்களும் விழுவதும் அவர்களை மீட்பதற்கு நடத்தப்படும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகளால் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கிராமப்புறங்களில் உள்ள ஆழ்துளை கிணற்றுகளை மூடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் நிர்வைர் என்ற நான்கு வயது சிறுவன் நேற்று காலை தனது தாத்தா மற்றும் தந்தையுடன் வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது தாத்தா வேலை செய்துகொண்டிருக்க நிர்வைரின் தந்தை தான் கொண்டுவந்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஆள்துளை கிணற்றில் மண் சரிந்து விழுந்துள்ளான். சிறுவனின் கூச்சல் சத்தம் கேட்டு அவனது தாத்தாவும், தந்தையும் ஓடிவந்து பார்த்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் சிறுவனை மேலே கொண்டுவர முடியவில்லை. பிறகு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தனர் அதிகாரிகள். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும்…
தேசிய மருத்துவர்கள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய 20ம் நூற்றாண்டில் மருத்துவ உலகம் பல்வேறு வகைகளில் முன்னேறி இருக்கிறது. மனித உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்ப புது புது இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. தீர்க்கவே முடியாது என்று இருந்த வியாதிகளுக்கு மருத்துவர்கள் மருந்துகளை தயாரித்து மக்களை காப்பாற்றி வருகின்றனர். அப்படி இருக்க, நாட்டின் முதல் பெண் மருத்துவர் பட்ட கஷ்டங்களை நாம் நினைவு கூர்வது அவசியம்.. 1886-ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தவர் முத்துலட்சுமி ரெட்டி. புதுக்கோட்டை அரசர் கல்லூரித் தலைவராக இருந்த நாராயணசாமி ஐயர் என்பவரது மகளான இவர், தந்தையின் வழிகாட்டுதல் படி, ஆடவர் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார். அப்போதெல்லாம் பெண்கள் வீட்டின் அடுப்பங்கறையில் மட்டும் இருந்தால் போதும் என்ற காலகட்டம். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் பிறந்தாலே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் அளவிற்கு இருந்தனர் மக்கள். அப்படியிருக்க, அந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கூடம் ஏறி படித்தார்…
நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பணிக்காலம் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், உபேந்திர திரிவேதி பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. அப்பொது அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டின் 31-வது ராணுவத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 1986-ல் ராணுவதில் சேர்ந்த தீரஜ் சேத், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்பு படை, பாலைவனப் பகுதிகளில் கவசப் படைப்பிரிவு என ஏறக்குறைய 40 ஆண்டுகள் கடுமையான சூழல்களில் பணியாற்றியவர்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பராசக்தி. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட பீடியாட்ரிக் படமாக வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷனை வசூல் செய்தது. இந்த நிலையில், இப்படத்தில் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும், அதனை பெற்றுத் தரக் கோரியும் இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், ”பராசக்தி படத்திற்காக ரூ.8.39கோடி ஊதியம் வழக்கப்படவில்லை. இதனால் பராசக்தி படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஜூலை 10-ம் தேதி வெளியாகவுள்ள அதர்வாவின் இதயம் முரளி திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 8-ம் தேதி வரை இப்படத்தின் செயர்கைக் கோள் வழி வெளியீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்…
பொதுவாகவே தமிழக வெற்றிக் கழகத்தை ரீல்ஸ் கட்சி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது உண்டு. அதற்கேற்றார் போல, அமைச்சர்கள் முதல் கடைநிலை நிர்வாகிகள் வரை, தவெகவை சேர்ந்தவர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் வீடியோவாக எடுத்து அதனை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக் கொண்டுள்ளனர். அப்படி, விருதுநகர் மாவட்டம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் என்பவர் அங்குள்ள போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக எடுத்து, சினிமா பாடலுடன் எடிட் செய்து ரீல்ஸாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேலை, 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கம் செய்வதாக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை இந்த நடவடிக்கை”…
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் தொடங்கி பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு மரியாதை செய்திருந்தனர். பாக்யராஜின் சிஷ்யனான பார்த்திபன், அவரது இறுதி நொடி வரை உடனிருந்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் பாக்யராஜ் இல்லத்திற்கு சென்றவர், மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” கடைசி வரை யாரோ? பாடிய கண்ணதாசனுக்கே காடு வரை தானே? பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான் மதுரை காட்டுராடு வரை சென்றேன் -அதுவே விளிம்பு. அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார். இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட்நகர் மின் தகனம் வரை. எழுதுதட்டை அதில் சில வெண்காகிதங்கள் அதில் ‘அன்புடன் உங்கள் பாக்யராஜ்’ கொட்டை எழுத்துக்களில் அவர் இதயப் பகுதியில்…
கேளம்பாக்கம் அருகே கடந்த 16ம் தேதி பாழடைந்த விவசாய கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் (நேற்று 29 தேதி) வெடிகுண்டை ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே வெடிக்க வைத்து செயலிழக்க வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூர் விஐபி நகரில் உள்ள பாழடைந்த விவசாய கிணற்றில் கடந்த 16ம் தேதி கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் வெண்டிகுண்டை 13 நாட்கள் கழித்து (நேற்று 29 ஆம் தேதி மாலை) இந்திய ராணுவ அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அதே இடத்தில் வெடிகுண்டை செயலிழக்க வைத்தனர். கடந்த 16ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அப்பகுதி இளைஞர்கள் ஹரி கிருஷ்ணன், பிரவீன், தமிழ்செல்வன் ஆகியோர் கிணற்றின் அருகே சென்றபோது கிணற்றுக்குள் நாய்க்குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அதை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கியப்போது பாழடைந்த கிணற்றுக்குள் ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டு இருந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து அருகில் உள்ள கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல்…
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உப்பாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 30 வாதான ராஜசேகர். இவர் கெலமங்கலம் சின்னட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜசேகர் தனது கடை உரிமையாளர் ராஜேஷ்குமார் மற்றும் நண்பர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி, அதனை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அதில், நள்ளிரவில் நானும், எனது தாய் மஞ்சுளாவும் தற்கொலை செய்து கொள்கிறோம். அதற்கு காரணம் பக்கத்து வீட்டை சேர்ந்த ருத்ரப்பா என்பவரும் அவரது குடும்பத்தினரும் தான் என கூறியிருக்கிறார். அத்தோடு என்னையும், எனது தாயையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ராஜசேகரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ருத்ரப்பாவுக்கும், ராஜசேகருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்து அதிர்ந்த நண்பர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ராஜசேகரின் செல்போனை டிராக் செய்த போலீசார், சிக்னல் மூலம் தண்டரை ஏரி பகுதியில் அவர் இருப்பதை…