Author: Editor web4

இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த 10-ம் தேதி காலமான நிலையில், சமீபத்தில அவரது உதவி இயக்குநராக இருந்து சினிமாவில் வளர்ந்த இயக்குநர் பாக்யராஜூம் மறைந்தது சினிமா திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாராதிராஜாவின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”இமயத்தைப் புதைத்த இடம் இதுதான் தூங்கு ராஜா தூங்கு ஓடி ஓடிக் களைத்தவனே கலையாத உறக்கத்தில் கனவுகளற்ற உறக்கத்தில் ஓய்வுகொள் மண்ணை இழுத்துப் போர்த்துப் படுத்திருக்கும் உன்னை குளிரோ மழையோ வெயிலோ புயலோ ஒன்றும் செய்யாது நலம் கேட்க வந்த நான் நல்லசெய்தி கொண்டுவரவில்லை இதே இடத்தில் என்னோடு நின்று இறுதி மரியாதை செலுத்திய உன் சீடன் உனைத்தேடி வந்துவிட்டான் ஜோடிக் குதிரைகளை இழந்து கவிழ்ந்து கிடக்கிறது கலைத்தேர் கடமை இருக்கிறது இந்த மண்ணகத்தில் உனக்கொரு மணிமண்டபம்; அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன் முதலமைச்சர் விஜயைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன்…

Read More

திருத்துறைப்பூண்டி அருகே பிரசித்தி பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ )முன்னாள் முதன்மை தேர்வு குழு தலைவராக இருந்தவர் சேத்தன் சர்மா . இவர் 1987 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனை படைத்தவர் சேர்த்தன் சர்மா. இந்த நிலையில் இன்று திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் அவரது மனைவி அவரது மகளுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். அவருக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு மரியாதையும் செய்யப்பட்டது.

Read More

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மாநிலங்களுக்கு இடையிலான 65-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் கேரள வீராங்கனை ஆன்சி சோஜன் 6.88 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். இதன் மூலம் அவர் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதுதொடர்பாக அஞ்சு பாபி ஜார்ஜ் கூறுகையில், எனது 22 வருட நீளம் தாண்டுதல் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது ​​யாரோ ஒருவர் வந்து என் சாதனையை முறியடித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். இதற்குமுன், 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அஞ்சு ஜார்ஜ் 6.83 மீட்டர் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. கடந்த 22 ஆண்டாக நீடித்த இந்த சாதனையை ஆன்சி சோஜன் தற்போது முறியடித்து அசத்தியுள்ளார். விளையாட்டு வீரர்கள் பலர் ஆன்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Read More

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், புனித விண்ணரசி அன்னை ஆலயத்திற்கு அருகே செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 40 ஆண்டுகளாக வழிபாட்டுத் தலமாக செயல்பட்டு வரும் ஆலயத்திற்கு அருகே உள்ள இந்த மதுபானக் கடை, பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பெரும் இடையூறாக இருந்ததால், கடந்த மார்ச் மாதம் அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், மதுக்கடையுடன் இணைந்துள்ள மதுக்கூடத்தின் உரிமத்தை நீட்டிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Read More

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்ததற்காக, மன்னிப்பு கேட்க வேண்டும் என அரசியல் ஆலோசகர் சபரீசன் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமூக பொருளாதார ஆராய்ச்சி மற்றும் அரசியல் ஆலோசனை பணிகளை மேற்கொள்ளும் பாப்புலஸ் எம்பவர்மெண்ட் நெட்வொர் எனப்படும் பென் நிறுவனத்தின் நிறுவன தலைவரான சபரீசன் சார்பில் வழக்கறிஞர் ஏ.எஸ்.அஸ்வின் பிரசன்னா, தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுக குறித்து, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் தவெக நிர்வாகிகள் விமர்சித்து வந்துள்ளனர்; திமுக தலைவரும், தமிழக முதலமைச்சராக இருந்தவருமான மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற ஒரே காரணத்துக்காக சபரீசன் மீதும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய, உண்மைக்கு புறமான கருத்துகளை இரண்டு அமைச்சர்களும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது நேர்மை,…

Read More

தமிழ்நாடு முழுவதும் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகள் வரை உள்ளவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டி எஸ் கே மகப்பேறு மருத்துவமனையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காலை 7 மணி முதல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்த நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி காலை 9 மணியளவில் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக காலை முதல் வந்திருந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்காமல் அமைச்சரின் வருகைக்காக காத்திருக்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரூம் அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். 9.20 மணியளவில் அமைச்சர் வந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனால் காலை முதல் பச்சிளம் குழந்தைகளோடு வந்திருந்த தாய்மார்கள அதிருப்தி…

Read More

கோபிசெட்டிபாளையம் கச்சேரி மேடு பகுதியில் தமிழக முதல்வர் விஜய்யின் 52 வது பிறந்த நாளை ஒட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாட்டில்  முதலமைச்சரின் தலைமையில், இன்றைக்கு எல்லாத் துறைகளும் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வருவாய்த்துறையைப் பொறுத்தவரையில், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்களின் முகவரி, ரத்த வகை , ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி போன்ற விவரங்களை உள்ளடக்கிய ‘டேட்டா’  அடையாள அட்டை வழங்கலாமா என்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். முன்பெல்லாம், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருவாய்த்துறையின் மூலமாக ஆசிரியர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் (வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ் போன்றவை) வழங்கும் வழக்கம் இருந்தது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு…

Read More

தமிழ்நாட்டில் சுமார் 40,000 மேற்பட்ட முகாம்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 741 மையங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 91,427 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 2964 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களை இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. அதேப் போல, கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார். நகர்ப்புறங்களில் சுமார் 491 மையங்களிலும், கிராம பகுதிகளில் 1,124 மையங்களிலும் என 1,615 மையங்களில்…

Read More

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 69வது லீக் ஆட்டத்தில் கொலம்பியாவும், போர்ச்சுகல் அணியும் இன்று காலை 5 மணிக்கு மியாமியில் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற தவறின. மேலும், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டம் சிறப்பாக இருந்ததால் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. 2-வது பாதியிலும் முதல் கோலை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக முயற்சித்தன. ஆனால், கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் வீரர்களின் உறுதியான தற்காப்பும் கோல் கீப்பர்களின் அபாரமான சேவ்-களால் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், பரபரப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் தலா ஒரு புள்ளியைப் பெற்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல்…

Read More

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதேவேளை, பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் முயற்சியால் அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்க் கட்டணம் விதிக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது. மேலும், தங்கள் அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடந்ததாக கூறி சரக்கு கப்பல் மீது ஈரான் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. சரக்கு கப்பல் மீது…

Read More