Close Menu
    What's Hot

    மேலாடையை கிழித்து பாலியல் சீண்டல் செய்து வீடியோ; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

    ஆக்ரோஷமாக மாறிய ‘பாகுபலி’..!! குடியிருப்புக்குள் புகுந்து அட்ராசிட்டி..!! பீதியில் மக்கள்..!!

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை, சிகரெட்டுகள்  பறிமுதல்!. லாரி டிரைவர் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரங்கள்!. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது!. உதயநிதி காட்டம்!
    Featured

    அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரங்கள்!. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது!. உதயநிதி காட்டம்!

    Editor web3By Editor web3June 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhayanithi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

    இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.

    வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது.

    தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் – பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.

    சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது – ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது – சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை..

    இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது.

    ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை.

    அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.

    தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல – மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.

    இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது.

    Law and Order tamilnadu udhayanidhi Udhayanidhi Stalin ventilator
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!
    Next Article முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு!. ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    மேலாடையை கிழித்து பாலியல் சீண்டல் செய்து வீடியோ; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

    June 15, 2026

    ஆக்ரோஷமாக மாறிய ‘பாகுபலி’..!! குடியிருப்புக்குள் புகுந்து அட்ராசிட்டி..!! பீதியில் மக்கள்..!!

    June 15, 2026

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை, சிகரெட்டுகள்  பறிமுதல்!. லாரி டிரைவர் கைது!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேலாடையை கிழித்து பாலியல் சீண்டல் செய்து வீடியோ; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

    ஆக்ரோஷமாக மாறிய ‘பாகுபலி’..!! குடியிருப்புக்குள் புகுந்து அட்ராசிட்டி..!! பீதியில் மக்கள்..!!

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை, சிகரெட்டுகள்  பறிமுதல்!. லாரி டிரைவர் கைது!

    பாகலூர் அருகே பரபரப்பு!. சீறிய ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு!

    சினிமா வசனம் தேவையில்லை; போர்க்கால நடவடிக்கை எப்போது? – முதல்வருக்கு டிடிவி கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.