Author: Editor web2

கேரளப் பகுதிகளில் இன்று (ஜூன் 4) முறைப்படி தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தமிழகத்தின் சில பகுதிகள், கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் வங்கக்கடல் பகுதிகளிலும் வேகமாக முன்னேறியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை 26 மாவட்டங்களில் கனமழை பருவமழை தீவிரமடைந்து வருவதால், நாளை (ஜூன் 5) தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 26 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 6 முதல் 10 வரை மழை நீடிக்கும்…

Read More

மின்சார வாரிய தலைமையகத்திலிருந்து நிலக்கரி கொள்முதல், டெண்டர்கள் மற்றும் முக்கியத் திட்டங்களின் ஆவணங்கள் அடங்கிய 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக சொல்லப்படும் விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்பவே ஏதோ தவறு நடந்தது போல தோற்றத்தை உருவாக்கி வருவதாக தவெக அரசு மீது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “தவெக அரசு பொறுப்பேற்று இதுவரைக்கும் மின் விநியோகம் தொடர்பாக ஓர் ஆய்வுக்கூட்டத்தை கூட மின்சாரத்துறை அமைச்சர் நடத்தவில்லை. கடைநிலை வரைக்கும் உள்ள அதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டம் நடத்தினால்தான் எந்த ஊரில் என்ன பிரச்சினை என்று தெரியும். அமைச்சரே தன்னை யாரோ மிரட்டுவதாக சொல்கிறார்; அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானியர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது எனப் பாருங்கள். டெண்டர் விடுவதில் யாரும்…

Read More

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்திலிருந்து நிலக்கரி கொள்முதல், டெண்டர்கள் மற்றும் முக்கியத் திட்டங்களின் ஆவணங்கள் அடங்கிய 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மே 16-17 வார இறுதி நாட்களில் இந்தச் சதி அரங்கேறியுள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். யாரைக் காப்பாற்ற இந்தச் சதி? இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், மின்துறை தலைமை அலுவலகத்தில் மிக முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். “தங்களைத் தூயசக்தி என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த ஆட்சியில், டெண்டர் தொடர்பான முக்கியத் தரவுகள் இவ்வாறு காணாமல் போயிருப்பதை நாம் என்னவென்று எடுத்துக் கொள்ள…

Read More

சென்னை அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தின் 4, 5, 7 மற்றும் 10 ஆகிய தளங்களில் இருந்து, நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 கணினி ஹார்டு டிஸ்க்குகள் (Hard Disks) திருடப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் ஆய்வு நடத்திய சில நாட்களிலேயே, மே 16-17 வார இறுதி நாட்களில் இந்தத் துணிச்சலான சதி அரங்கேறியுள்ளது. துறை அதிகாரிகளின் துணையோடு சதியா? மின்சாரத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள், குறிப்பாக ₹397 கோடி மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் குறித்து சிபிஐ (CBI) விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய முகமைகளும் 2021-2023 காலகட்ட மின்வாரிய டெண்டர்களை ஆய்வு செய்து வரும் வேளையில், இந்தத் திருட்டு நடந்துள்ளது.  முக்கியமாக, இந்தத் துறைப் பிரிவுகளில் இருந்த சிசிடிவி…

Read More

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (Super Speciality) இடங்களை அகில இந்தியத் தொகுப்பிற்குச் சரண்டர் செய்யக் கோரும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கும், அரசு மருத்துவர்களுக்கும் பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய புதிய அரசின் முறையற்ற வாதங்கள் மற்றும் மெத்தனப் போக்கின் காரணமாக தமிழ்நாட்டின் மருத்துவ இடங்கள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளதாகக் குற்றம் சாட்டி, முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 430 உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வில், 215 இடங்கள் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்டன. இதில் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், 63 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு 152 இடங்கள் காலியாக இருந்தன.…

Read More

இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது இருக்கும் வரிகளையும் கடந்து, கூடுதலாக 10% முதல் 12.5% வரை புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களில் ‘கட்டாய உழைப்பு’ அல்லது கொத்தடிமை தொழிலாளர்கள் (Forced-labour) பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அமெரிக்கா இந்த அதிரடி வர்த்தக நெருக்கடியைக் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த உலகளாவிய கூடுதல் வரி விதிப்பை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்த நிலையில், தற்போது ‘செக்‌ஷன் 301’ என்ற வர்த்தகச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி புதிய வடிவில் இந்த வரிகளை விதிக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது. நிபுணர்கள் சொல்வது என்ன? இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த ‘கட்டாய உழைப்பு’ குற்றச்சாட்டை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தச்…

Read More

மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் (NCP) ஆகிய பிராந்திய கட்சிகளை உடைத்து, ஆட்சியைப் பிடித்த பாஜகவின் அதே ‘சதுரங்க வேட்டை’ வியூகம், தற்போது மேற்குவங்கத்திலும் அரங்கேறத் தொடங்கியுள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரம் பரபரத்து கிடக்கிறது. கடந்த மாதம் நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக புதிய ஆட்சியை அமைத்தது. தேர்தல் தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் மீள்வதற்குள்ளாகவே, அக்கட்சி தற்போது வரலாறுகாணாத பிளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மம்தா பானர்ஜிக்கு எதிராக அவரது சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களே போர்க்கொடி தூக்கியுள்ள சூழலில், இதன் பின்னணியில் டெல்லி பாஜகவின் ‘மகாராஷ்டிரா மாடல்’ திரைமறைவு வேலைகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றியுள்ளது. மம்தாவுக்கு எதிராக திரண்ட எம்.எல்.ஏ-க்கள் இந்த அரசியல் பூகம்பத்தின் தொடக்கமாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கான கடிதத்தில் தங்களது கையெழுத்துக்கள்…

Read More

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலையே தலைகீழாக மாற்றியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் நீண்டகாலமாக இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே தவெக பக்கம் சாய்ந்து, புதிய ஆட்சியில் அமைச்சரவை இடத்தையும் பெற்றது. இதனால் திமுக – காங்கிரஸ் உறவு முற்றிலும் முறிந்த நிலையில், தற்போது காலியாகியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி விவகாரம் மீண்டும் இரு கட்சிகளுக்கிடையிலான அரசியல் மோதலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. காலியான எம்.பி பதவி அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அந்த இடத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்டிருப்பதால், அந்த இடத்தை யாருக்கு வழங்குவது என்பது முழுக்க முழுக்க தவெக தலைமையின் முடிவாக இருந்தது. ஆரம்பத்தில், தவெக தனது முதல் மாநிலங்களவை உறுப்பினரை டெல்லிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அந்த இடத்தை காங்கிரஸுக்கு…

Read More

கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளிடம் இருந்து மேலும் பல முக்கியத் தடயங்கள், வாக்குமூலங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய பொருட்களைப் பறிமுதல் செய்ய வேண்டி உள்ளதால், அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு இடையே, சிறைக்குள் சக கைதிகளால் தாக்கப்பட்டுக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முக்கியக் குற்றவாளி கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரையும் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின்…

Read More

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்டகால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு 2020ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், 2025-26 கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் காலியாக உள்ள இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் அரசு மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மீண்டும் பாதிக்கப்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கான…

Read More