Author: Editor web3

சேலம் மாவட்டம் ஓமலூர் மத்திய பேருந்து நிலையம் அருகே, சமீபத்தில் மூடப்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் இருந்த அதே இடத்தில், தற்போது புதிய சொகுசுத் தனியார் மதுபானக்கூடம் ஒன்று திறக்கப்பட்டிருப்பது உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் பேருந்து நிலையத்தின் பிரதானச் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் 2 அரசு டாஸ்மாக் கடைகள் நீண்ட நாட்களாகச் செயல்பட்டு வந்தன. இதனால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் பயணிகளுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. பொதுமக்களின் தொடர் புகார்கள் மற்றும் போராட்டங்களை அடுத்து, மாவட்ட நிர்வாகம் அந்த 2 டாஸ்மாக் கடைகளையும் அண்மையில்தான் முழுமையாக அப்புறப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்திருந்த சூழலில், அதே வணிக வளாகத்தில் எவரும் எதிர்பாராத வகையில் தற்போது புதிய தனியார் பார் ஒன்று திறக்கப்பட்டுள்ளது மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் புதிய தனியார் மதுக்கூடத்தினால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச்…

Read More

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கியுள்ள நிலையில், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத் துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டதற்கு நடிகர் விஷால் பகிரங்கமாக வருத்தம்  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார், https://x.com/i/status/2055905870245204103 மதிப்பிற்குரிய அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்குத் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத் துறை ஒதுக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இது அவரைத் தாழ்த்திப் பேசுவதற்காக அல்ல. ஆனால், தற்போதைய சூழலில் நமது ஒட்டுமொத்தத் திரைப்படத் துறையும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பல அவசரச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளனர். இத்தகையச் சூழலில், நமது சினிமா துறையில் என்ன நடக்கிறது என்ற அனுபவமே இல்லாத அல்லது மிகக் குறைந்த அனுபவம் கொண்ட ஒருவரிடம், ஒரு சங்கமாகவோ அல்லது தனிநபராகவோ…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி தற்பொழுது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தடையையும் மீறி, கட்சியில் தங்களுக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்க எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அதிரடியாகப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். அதிமுக-வில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 1800 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்று, எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க வேலுமணி தரப்பு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து எஸ்.பி.வேலுமணி தரப்பினர் வெற்றிகரமாகக் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கி, உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டக் கோரி  அழுத்தத்தைக் கொடுக்க வேலுமணி தரப்பு தீவிரமாகத் தயாராகி வருகிறது. பொதுக்குழுவைக் கூட்டுவது மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம்…

Read More

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில், மிக வீரியமிக்க ‘எபோலா’ வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தத் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். காங்கோ நாட்டின் இதூரி (Ituri) மாகாணத்தில் இந்த எபோலா நோயின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. வழக்கமான எபோலா வைரஸை விட, இது ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo virus) எனப்படும் மிகவும் அரிய வகை எபோலா வைரஸ் தொற்று என்பதை அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், உமிழ்நீர், வியர்வை, சிறுநீர், வாந்தி அல்லது விந்து போன்ற உடல் திரவங்கள் (Body fluids) நேரடியாக மற்றொரு மனிதரின் உடலில் படுவதன் மூலமாகவே இந்தத் கொடிய தொற்று மிக வேகமாகப் பரவுகிறது. இதூரி மாகாணத்தில் இந்த நோயின் பரவல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதால், காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா மற்றும்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு மர்மமான பதிவு, ஈரானுடன் மீண்டும் போர் வெடிக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக வலைத்தளப் பிளாட்ஃபார்மான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில், டிரம்ப் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்’ (MAGA) தொப்பி அணிந்து கொண்டு, அமெரிக்கக் கடற்படையின் உயர் அதிகாரி ஒருவருடன் கொந்தளிப்பான கடலுக்கு நடுவே ஒரு போர்க்கப்பலில் நிற்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் மின்னல்களுடன் கூடிய பயங்கரமான புயல் சூழலில், அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு அருகே ஈரான் நாட்டின் தேசியக் கொடி பறக்கும் சில கப்பல்களும் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ள டிரம்ப், அதன் மேலே “இது புயலுக்கு முந்தைய அமைதி” (It Was The Calm Before The Storm) என்று…

Read More

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே தனது அதிரடி ஆக்ஷனைத் தொடங்கியுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக தங்களது துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் உள்பட மொத்தம் 10 பேர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, நேற்று அவர்களுக்கான அமைச்சரவை இலாகாக்கள் (துறைகள்) அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டன. இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி முடுக்கிவிடுவதற்கான பணிகளில் முதலமைச்சர் விஜய் இறங்கியுள்ளார். அந்தவகையில், அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து, அந்தந்தத் துறை அதிகாரிகளுடன் உடனடியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் துறை வாரியான தற்போதைய திட்டங்களின் நிலவரங்களை ஆராய்ந்து, பணிகளை உடனே முடுக்கிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். ஒருபுறம் பொறுப்பேற்ற அமைச்சர்களைக் கொண்டு…

Read More

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், புதிய தவெக அரசின் செயல்பாடு மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு நிலைப்பாடு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது கட்சியின் முக்கிய நிர்வாகி ராஜசேகர் மற்றும் பல நிர்வாகிகள் உடனிருந்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சி மற்றும் அதன் ஆயுள் காலம் குறித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், “சினிமாவில் (ரீலில்) வேண்டுமானால் எளிதாக ஆட்சி நடத்திவிடலாம், ஆனால் நிஜத்தில் (ரியலில்) அப்படி நடத்த முடியாது. நிஜம் என்ன என்பதை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். தற்போதைய தவெக ஆட்சியின் ஆயுள் காலம் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் ஆட்சி முறை குறித்து இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகு நாம் விரிவாகப் பேசலாம். தவெக-வில் தற்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.” மேலும், குதிரை வேகத்தில் செயல்படுவோம் என்று கூறும்…

Read More

சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை விரைவுபடுத்தவும் சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். டாஸ்மாக் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு மற்றும் முக்கிய வழக்குகளை முடிப்பதற்கான காலக்கெடு குறித்துப் போலீசாருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அனைத்து விதமான மதுக்கடைகளின் செயல்பாடுகள் குறித்து காவல் ஆணையர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அந்தவகையில், டாஸ்மாக் மற்றும் எலைட் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும். FL2 மற்றும் FL3 (பார் மற்றும் நட்சத்திர விடுதிகள்) கடைகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். கால நேரத்தை மீறிச் செயல்படக் கூடாது. இந்த விதிமுறைகள் ஏதேனும் ஒரு பகுதியில் மீறப்படுவது கண்டறியப்பட்டால், அந்தந்தப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் இருக்கும் ரோந்து போலீசார் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார். மேலும், வழக்குகளை இழுத்தடிக்காமல் விரைந்து…

Read More

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை மிக விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாற்றத்தின் போது, ஆட்சி அமைக்க ஆதரவளித்த கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் (234 இடங்கள்), முதலமைச்சரையும் சேர்த்து அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியில் இருக்க முடியும். தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்பட 10 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகின்றனர். விதிகளின்படி இன்னும் 25 இடங்கள் காலியாக உள்ளதால், புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தற்போது வனம், வேளாண்மை, வருவாய்த்துறை, கூட்டுறவு மற்றும் வீட்டுவசதி வாரியம் போன்ற மிக முக்கியத் துறைகள் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாமல், முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் உள்ளன. நிர்வாகத்தை எளிமைப்படுத்தவும், மக்களின்…

Read More

விஜய்யின் அரசியல் வெற்றி குறித்தும், தன்னைச் சுற்றி பரவிய வதந்திகள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விஜய் முதல்வராவதை தடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்ததாக பரவிய வதந்திகளை  முற்றிலுமாக மறுத்துள்ளார். அதாவது, “தேர்தல் முடிவுகளுக்குப் பின் நான் மு.க.ஸ்டாலினை சந்தித்ததால் பல விமர்சனங்கள் வந்தன. அதற்கு நான் பதிலளிக்காமல் இருந்திருந்தால், அந்த வதந்திகள் உண்மையாகிவிடும். மு.க.ஸ்டாலின் எனது 40 ஆண்டு நண்பர். அரசியலுக்கு அப்பாற்பட்டது எங்களது நட்பு. தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோற்றது சங்கடம்தான் என்றார். நான் ஒன்றும் தரங்கெட்ட ஆள் கிடையாது. எனக்கும் விஜய்க்குமே 28 வயது வித்தியாசம் உள்ளது. நான் அரசியலிலேயே இல்லாதபோது விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? கமல் முதல்வராகியிருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா எனத் தெரியவில்லை விஜய் வெற்றிபெற்றது எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் என்று ரஜினி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். விஜய்யின் அரசியல்…

Read More