Author: Editor web2
அரசியல் களத்தில் ஒரு கட்சியைத் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் வைத்திருக்கவும், அதன் உட்கட்டமைப்பை அடிமட்ட அளவில் வலுவாகப் பேணவும் எம்.எல்.ஏ., எம்.பி அல்லது அமைச்சர் பதவிகளைத் தாண்டி, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள் மிக முக்கியமானவை. வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள் மூலமாகத்தான் ஒரு கட்சியால் உள்ளூர் பகுதி மக்களுடன் நேரடியாக நெருக்கமாகி, தங்களின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க முடியும். அந்த வகையில், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய போர்க்களமாக மாறப் போகிறது. சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிகபட்ச இடங்களை வாரிக் குவிக்கத் தமிழக வெற்றி கழகம் மிக பிரம்மாண்டமான வியூகங்களை வகுத்து வருகிறது. கொத்து கொத்தாக இணையும் அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டுத் தவெகவின் உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், முதல்கட்டமாகத் தமிழகத்தின்…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் இடையே வெடித்துள்ள மோதலும், பகிரங்கமான வார்த்தைப் போர்களும், தேசிய அளவிலான ‘இந்தியா’ கூட்டணியின் அடித்தளத்தையே உலுக்கத் தொடங்கியுள்ளது. ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக திமுக எடுத்துள்ள அதிரடி முடிவும், அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை நேரடியாகக் குறிவைத்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் வெளியான தலையங்கமும் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ராகுலை விளாசிய ‘முரசொலி’ முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள ‘தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்!’ என்ற காரசாரமான தலையங்கம், காங்கிரஸ் கட்சி மீதான திமுகவின் உச்சக்கட்ட கோபத்தைப் பறைசாற்றுகிறது. “தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் கழகத் தோழர்கள் மிகுந்த மனக்காயமுற்றிருக்கிறார்கள்” என்று அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் தன்னிச்சையான மற்றும் ஆணவமான…
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்றும், சென்னை நகருக்குள் நுழையக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி மாநில போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பிலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதியளித்ததுடன், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையை மேற்கொண்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, பேருந்து முனையம் அமைக்க…
மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்தார். “முதல்வர் கட்டாயம் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை. கடந்த காலங்களில் சிலர் தங்களது அரசியல் இருப்பை வெளிக்காட்ட தினசரி செய்தியாளர்களை சந்தித்திருக்கலாம். ஆனால், எங்கள் முதல்வர் தினந்தோறும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கவனித்து வருகிறார். மக்களுக்குத் தேவையான தகவல்களை உரிய நேரத்தில் தெளிவுபடுத்தி வருகிறோம். செய்தியாளர்களை சந்திப்பதுதான் அரசியலின் அடையாளம் அல்ல” என்று தெரிவித்தார். திருப்பரங்குன்றம் மலை தீபமேற்றும் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். கடந்த ஆண்டுகளாக இருந்த நிலை தொடர வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு.…
தமிழக அரசியல் களத்தில் இன்று மேலும் ஒரு பரபரப்பான நிகழ்வை எதிர்கொண்டுள்ளது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, ‘We The Leader’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக இன்று அறிவித்த இதே நாளில், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உற்றுநோக்க வைக்கும் வகையில் மற்றொரு மெகா அறிவிப்பும் வெளியாகியுள்ளது. லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ’மக்கள் மேடை / மக்கள் இயக்கம்’( (Citizens’ Platform / People’s Movement) என்கிற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, அதன் நோக்கங்கள் குறித்த ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அண்ணாமலையின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியான அதே சில மணி நேர இடைவெளியில், லதா ரஜினிகாந்தும் தனது புதிய முழக்கத்தை முன்வைத்து வீடியோ வெளியிட்டிருப்பது தற்செயலானது தானா அல்லது இதன்…
முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில், முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது தமிழக ஊழல் கணகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், அப்போது திமுக ஆட்சியில் இருந்ததால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்…
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்றக்கூடிய நிலையில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் 2026-2027 ஆண்டிற்கான பட்ஜெட் குறித்தான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெரும் கூடத்தில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், இலாகா ஒதுக்கப்படாமல் இருக்கும் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் நாஜும் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். வருகின்ற நிதி ஆண்டிற்கான நிதி நிலை குறித்த துறை ரீதியான ஆலோசனை நடைபெற்றது. இதில் 13.397 கோடி ரூபாய் காண திட்ட மதிப்பீட்டிற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புவதற்கு அனுப்பி வைக்கப்படுவார் அதன் பிறகு…
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தியின் சமூக வலைதள பதிவு புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்துக்கான காலியாக உள்ள இடத்துக்கு தவெக போட்டியியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை தங்களுக்கு விட்டுத்தர கோரியது காங்கிரஸ் கட்சி. அந்த கோரிக்கையை விஜய் ஏற்றுக்கொண்டதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய தரவுப் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம்) முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து, நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக செயல்படுவேன் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்த நிலையில்,…
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில் தனி அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். “அதிக மக்களை இணைக்கும் புதிய அரசியல் தேவை” என்று கூறியுள்ள அவர், அடுத்த தேர்தலிலேயே தனது புதிய கட்சி களமிறங்கும் என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவின் முன்னாள் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தனது எதிர்கால அரசியல் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். “என்னுடைய பாதை வேறு. நிறைய மக்களை இணைத்து, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள காணொளியில் பேசிய அண்ணாமலை, 2020 ஆகஸ்ட் 25-ஆம் தேதி பாஜகவில் இணைந்து சுமார் ஆறு ஆண்டுகள் தமிழக மக்களுக்காக பணியாற்றியதை தனது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான காலமாகக் குறிப்பிட்டார். அதேநேரத்தில், தனது அரசியல் இலக்குகள் மேலும் விரிவானவை என்றும், புதிய அரசியல்…
திண்டுக்கல் – திருச்சி வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை நேரில் இயக்காமலேயே, ஆவணங்களில் மட்டும் பேருந்துகள் இயங்கியதாகக் காட்டி, போலி பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட பெரும் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விரிவான விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு வேடசந்தூரிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில், 3 வெவ்வேறு விதமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டதும், ஒரே வழித்தடத்தில் 3 பேருந்துகள் இயக்கப்பட்டது போன்ற போலி பதிவுகள் உருவாக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பி.கார்த்திக் ராஜா மற்றும் இளநிலை உதவியாளர் பி.சிவராஜ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் போக்குவரத்துக் கழகம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த மோசடி குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி தனது…